Skip to main content

குடியரசுத் தலைவர் நன்கொடை அளித்ததில் தவறில்லை - இராமர் கோயில் அறக்கட்டளை விளக்கம்

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

ram temple

 

அயோத்தியில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடடிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் அங்கு இராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி, இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். பிரமாண்டமாக உருவாகவுள்ள இக்கோயிலின் கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் 2024 ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் இராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட இராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு, இதுவரை 100 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதாக, அந்த அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், நன்கொடை குறித்த தகவல்கள் இதுவரை தலைமை அலுவலகத்தை அடையவில்லை. ஆனால் எங்கள் காரியகர்த்தர்கள் அளித்த தகவலின்படி, அவர்கள் இதுவரை 100 கோடி அளவிலான நன்கொடையை பெற்றுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

 

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இராமர் கோவில்கட்ட நன்கொடை வழங்கியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்தும் பேசியுள்ள சம்பத் ராய், ‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு இந்தியர். இராமர் இந்தியாவின் ஆன்மா. எனவே யார் வேண்டுமானாலும் இராமர் கோயில் கட்ட நன்கொடை அளிக்கலாம்’ என குறியுள்ளதோடு, ‘ராம்நாத் கோவிந்த் நன்கொடை அளித்ததில் எந்தத் தவறுமில்லை’ என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை காலம்... அயோத்தி ராமருக்கு பருத்தி ஆடை!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Cotton clothes for Ayodhya Ram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமர் சிலைக்கு பருத்தி ஆடை அணிவிக்கப்படும் என ராம ஜென்மபூமி தீர்த்த  சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது. கோடை காலத்தையொட்டி அயோத்தி ராமர் சிலைக்கு இன்று முதல் பருத்தி ஆடை அணிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ணம் பூசப்பட்ட கைகளால் நெய்த ஆடைகளை ராமருக்கு அணுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

Next Story

‘அயோத்தி ராமருக்கு ஒரு மணி நேரம் ரெஸ்ட்’ - அறக்கட்டளை அதிரடி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 Trust Management announced Ayodhi Ram needs an hour every day

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது, “ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 முதல் 1:30 வரை மூடவுள்ளோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.