Skip to main content

பள்ளி, கல்லூரிகள் மூடல்; இரவு நேர ஊரடங்கு அமல் - கரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை விதித்த பஞ்சாப்

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

punjab

 

இந்தியாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் பஞ்சாப் மாநிலத்திலும், கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அரசு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் என அனைத்து கல்வி நிலையங்களையும் மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதேபோல் ஜனவரி 15 ஆம் தேதி வரை, இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பார்கள், சினிமா அரங்குகள், மல்டிபிளக்ஸ்கள், மால்கள், உணவகங்கள், ஸ்பாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், இவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அதேபோல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ள பஞ்சாப் அரசு, இந்த கட்டுப்பாடுகள் வரும் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் பெருங்கூட்டம் கூடும் நிலையில், அவற்றுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த பகீர் சம்பவம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Incident happened on his pregnant wife in punjab

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், பிங்கி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது.

இதற்கிடையில், சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல், சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி பிங்கியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.