Skip to main content

பஞ்சாப்பில் பரபரப்பு! முதல்வர் இல்லம் முற்றுகை!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

 Punjab Chief Minister's house under siege

 

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சியில் இருக்கிறது. கரோனா தடுப்பூசிகள் மாநிலம் முழுவதும் மக்களுக்குப் போடப்பட்டுவருகிறது. இந்த நிலையில், கரோனா பாதிப்படைந்த குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்றும், தனியார் மருத்துவமனைகளுக்குத் தடுப்பூசிகளை முறைகேடாக விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டிவருகிறது பஞ்சாப் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சினோன்மணி அகாலிதளம்.


இந்த ஊழல்களை சி.பி.ஐ. விசாரிக்கவும், ஊழல்களுக்கு காரணமான சுகாதாரத்துறை அமைச்சர் பல்பிர்சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பஞ்சாபில் மிக பிரம்மாண்டமான பேரணியை நடத்தியது சிரோன்மணி அகாலிதளம். கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதல் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமாக திரண்டனர்.

 

 Punjab Chief Minister's house under siege

 

முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் பல்பிர்சிங் சித்து ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டவாறே முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்றது பேரணி. அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தது மாநிலக் காவல்துறை. கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் பேரணியைக் கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால், பேரணி கலைந்த நிலையில், எங்கு பார்த்தாலும் கூச்சலும் ரகளையுமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 Punjab Chief Minister's house under siege

 

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதலை கைது செய்து வீட்டுச் சிறையில் முடக்கியிருக்கிறது காவல்துறை. தங்கள் தலைவரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்துப் போராடிவருகின்றனர் சிரோன்மணி அகாலிதள கட்சியினர்.  இதனால் பஞ்சாப் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த பகீர் சம்பவம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Incident happened on his pregnant wife in punjab

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், பிங்கி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது.

இதற்கிடையில், சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல், சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி பிங்கியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.