Skip to main content

புதுச்சேரி: நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ் சங்க கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு! சமூக அமைப்புகள் கண்டனம்!!

Published on 05/07/2020 | Edited on 05/07/2020

 

puducherry tamil association building case pending for supreme court MLA office

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழ் சங்க கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததற்கு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

 

இதுகுறித்து புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'புதுவை தமிழ்ச் சங்க கட்டடம் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, அக்கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததைச் சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

புதுவை தமிழ்ச் சங்க கட்டடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 20 லட்சத்தில் கட்டப்பட்டது. தமிழ்ச் சங்கத்திற்கு இடம் சொந்தமாக இருந்தாலும், கட்டடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு (DRDA)சொந்தமானது. இதுகுறித்து அப்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குநர் இடையே பதிவுச் செய்யப்பட்ட ஒப்பந்தம் உள்ளது.

 

இக்கட்டடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைக்கவே பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் மேற்சொன்ன ஒப்பந்தத்தை மீறி கட்டடத்தை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்து வருகின்றனர். மேலும், இவ்வாறு வசூலாகும் பணத்திற்கும் முறையாக கணக்கு வைக்காமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளை தணிக்கை செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை. பணப் பயன் பெறும் வகையிலும், நூலகம் தவிர வேறு பயன்பாட்டிற்குக் கட்டத்தைப் பயன்படுத்தவும் கூடாது என ஒப்பந்தத்தில் கூறியதை அப்பட்டமாக மீறி செயல்பட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, கட்டடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது (W.P.No. 2071 of 2020).

 

இந்நிலையில், கடந்த 24.06.2020 அன்று, தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு நிலுவையில் உள்ள போது, இவ்வாறு கட்டடத்தை ஒப்பந்தத்தை மீறி வேறு பயன்பாட்டிற்கு விட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். எனவே, புதுச்சேரி அரசு இதில் தலையிட்டு தமிழ்ச் சங்கக் கட்டடம் உள்ளது உள்ளபடியே (Status Quo) இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அந்த கூட்டறிக்கையில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இராவணன் பகுத்தறிவு இயக்கம், செம்படுகை நன்னீரகம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, தமிழர்களம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.