Skip to main content

பிரபல 'சண்டே மார்க்கெட்' இடமாற்றம்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

puducherry sunday market place changed district collector arun announced

 

புதுச்சேரியில் செயல்பட்டு வந்த 'சண்டே மார்க்கெட்' இடமாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.

 

புதுச்சேரி மாநிலத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கடற்கரை சாலைக்கு அருகே 'சண்டே மார்க்கெட்' போடப்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஆடைகள், வாட்ச், காலணிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் மிகக் குறைந்த விலைக்கு கிடைப்பதால், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மேலும் புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

 

'சண்டே மார்க்கெட்' காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால், 'சண்டே மார்க்கெட்'டை வேறு இடத்திற்கு மாற்ற புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

 

இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'புதுச்சேரியில் மிகவும் பிரபலமான 'சண்டே மார்க்கெட்', மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இடவசதி இல்லாததால் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏ.ஃஎப்.டி.மைதானத்தில் 'சண்டே மார்க்கெட்' செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

cnc

 

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், 'சண்டே மார்க்கெட்' நெருக்கமான பகுதி என்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கேள்விக் குறியாகும். இதனால் மார்க்கெட், மைதானத்திற்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.