Skip to main content

புதுச்சேரி: சம்பள நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

puducherry employees salary issues

 

புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான பாசிக் நிறுவனத்தில் 500- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 

 

இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகச் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தச் சம்பளத்தை நம்பி வாழ்ந்து வந்த இவர்களின் குடும்பங்கள் சொல்லொனா துயரத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. 

 

கரோனா பேரிடர் காலத்திலும் இவர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்திலிருந்து ஒரு மாதச் சம்பளம் கூட வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது புதுவை அரசு. இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை சம்பளத்தில் 50% உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதம் உள்ள 50% சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கவேண்டும், பாசிக் நிறுவனத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. 

 

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், பாசிக் நிறுவனத்தில் லாபம் ஈட்டக்கூடிய மினரல் வாட்டர் பிரிவு, குப்பையில் உரம் தயாரிக்கும் பிரிவு, போர்வெல் பிரிவு (ரிக்) ஆகிய பிரிவுகளை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசிக் நிறுவனத்தில் பல ஏக்கர்களில் பண்ணை அமைக்கப்பட்டது. 

 

இந்தப் பண்ணையில் மாமரம், கொய்யா, தென்னைமரம், பலா, சப்போட்டா ஆகிய மரங்கள் இருந்து வருகின்றன. இதில் விளையக்கூடிய பொருட்கள் காய்த்து அறுவடை செய்யாமல் வீணாகியும், களவாடப்பட்டும் வருகிறது. இந்தப் பண்ணையில் விளையக்கூடிய பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் பல லட்சம் பாசிக் நிறுவனத்திற்கு வருமானம் வரும். எனவே, உடனடியாக ஏலம் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசிக் நிறுவனத்தில் பயனற்ற நிலையில் இருந்துவரும் பல்வேறு வகையான பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் பல லட்சங்கள் நிறுவனத்திற்கு வந்து சேரும். எனவே, உடனடியாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசிக் நிறுவனத்தில் பல்வேறு வேலைகள் தாமதமாகவும், காலம் கடத்தியும் நடைபெறுகிறது. 

 

குறிப்பாக இந்நிறுவனத்தில் மேலாண் இயக்குனராக உள்ள சிவப்பிரகாசம் வேளாண் துறையிலும் பொறுப்பு வகித்து வருகிறார். கூடுதலாக பாசிக் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்து வருவதால், இவரால் முழுமையாக பாசிக் நிறுவன வளர்ச்சிக்கு வேலை செய்ய முடியவில்லை. எனவே, பாசிக் நிறுவனத்திற்கு தனியாக மேலாண் இயக்குனரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

http://onelink.to/nknapp

 

அதேபோல் இந்நிறுவனத்தில் மேலாளர் (நிர்வாகம்), மேலாளர் (கணக்கு), மேலாளர் (தணிக்கை பிரிவு) ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. அவைகளை அரசு ஊழியர்களைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 

 

ஏ.ஐ.டி.யுசி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி, கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.