Skip to main content

கரோனா நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து தர்ணா! காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கைது!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


கரோனா நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிய மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுவைக்கு நிதி அளிக்காதது புதுவை மக்களை வஞ்சிக்கும் செயல் என காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

மேலும் நிதி அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று  (24/04/2020) கறுப்புக் கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தன. அதன்படி இன்று (24/04/2020) காலை 10.00 மணிக்கு தர்ணா போராட்டம் நடத்துவதற்காக மிஷன் வீதி ஜென்மராக்கினி கோவில் அருகில் காங்கிரஸ், திமுக கூட்டணியினர் கறுப்புக்கொடியுடன் திரண்டனர். 
 

 

 

PUDUCHERRY CONGRESS ALLIANCE PARTIES POLICE UNION GOVERNMENT


திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ தலைமையில் வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநிலத் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சலீம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன் உள்ளிட்டோர் கறுப்புக்கொடி ஏந்தி, கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். 
 

PUDUCHERRY CONGRESS ALLIANCE PARTIES POLICE UNION GOVERNMENT


அதையடுத்து காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையிலான போலீசார் ஊரடங்கு உத்தரவைக் காரணம் காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். அப்போது மத்திய அரசு கரோனா பேரிடர் நிதியைப் பாரபட்சமின்றி வழங்க வேண்டும், புதுச்சேரிக்கான நிதியை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி பெற வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 
 

http://onelink.to/nknapp


அப்போது சட்டமன்ற உறுப்பினர் இரா.சிவா திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைப் போலீசார் கைது செய்து தனித்தனி வாகனங்களில் ஏற்றி வெவ்வேறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.