Skip to main content

"இது ஒரு சாமி கட்சி" - முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

puducherry cm talks about nr congress god party 

 

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா பக்கமுடையான்பேட் இசிஆர் சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான என்.ரங்கசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியசாமி படத்திற்குத் தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார். உடன் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள்,  எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

அதனைப்  பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "கட்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும்,  மக்கள் நலனுக்காகவும் தொடங்கப்பட்டது தான் என்.ஆர்.காங்கிரஸ். கட்சியின் நோக்கம் புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும், அனைத்து திட்டங்களையும் மக்கள் பெற வேண்டும் என்பது தான். ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வந்தோம். இடையில் ஆட்சி செய்தவர்கள் அந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. இப்போது மீண்டும் நமது அரசு ஆட்சியில் அமர்ந்ததும் கடந்த ஆட்சியில் விடுபட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் விரைவில் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி விடுவோம்.

 

கட்சி தொடங்கும் போது மாநில அந்தஸ்தைப் பெறுவோம் என கூறினோம். தற்போது அது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்கும் கோரிக்கை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும்  அந்த கஷ்டங்கள். எல்லோருக்கும், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தேவையானது மாநில அந்தஸ்து தான். தனிப்பட்ட முறையில் எனது கோரிக்கை மட்டுமல்ல. மாநில அந்தஸ்து கோரிக்கை மாநில வளர்ச்சி, மக்கள் நலனுக்கான கோரிக்கை தான் இது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியின் வளர்ச்சி இருக்குமா இருக்காதா என்று எண்ணம் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் தோன்றும். நிச்சயமாக கட்சி நல்ல வளர்ச்சியில் இருக்கும். இது ஒரு சாமி கட்சி.  அதனால் கட்சி நிச்சயம் வளர்ச்சியில் இருக்கும்" என பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.