Skip to main content

"மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து மக்கள் விடுதலை" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

PUDUCHERRY BJP MEETING PM NARENDRA MODI SPEECH

 

புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் நடந்த பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில், வணக்கம் எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய வளர்ச்சிப் பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளைக் கொண்டு வரும். சிறிது நேரத்திற்கு முன் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. சுயசார்பு திட்டத்தில் புதுச்சேரி முக்கிய பங்காற்றும். புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது; மாநில மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடம் இருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். புதுச்சேரியில் மக்களுக்கான அரசு அமையவில்லை. காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இயங்கிய புதுச்சேரி அரசு, அனைத்து நிர்வாகத்தையும் சீரழித்துவிட்டது.

PUDUCHERRY BJP MEETING PM NARENDRA MODI SPEECH

 

புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு, வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையும். புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை; மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் ஜனநாயகத்தை அனைத்து வகையிலும் அவமதிக்கின்றனர். மீனவ பெண் கூறிய புகாரைத் தவறாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி. குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பிரிவினைவாத அரசியலைச் செய்து வருகிறது. பொய் சொல்வதில் தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெறக் கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். மன்னர் பரம்பரை போல் கட்சியை வழி நடத்துகிறது காங்கிரஸ் கட்சி. பரம்பரை அரசியல் நாடு முழுவதும் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. 

PUDUCHERRY BJP MEETING PM NARENDRA MODI SPEECH

 

புதுச்சேரியில் இளைஞர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை பா.ஜ.க. உருவாக்கித் தரும். புதுச்சேரியில் கல்வி கட்டமைப்பை உருவாக்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறிக்கோளாக இருக்கும். உள்ளூர் மொழியில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிட அரசு கூட்டுறவுத்துறையை சரியாக பராமரிக்கவில்லை. கூட்டுறவுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இம்முறை வாக்களிக்கும்போது வளர்ச்சிக்கு எதிரானவர்களை நிராகரியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி அரசியலுக்குப் புதுச்சேரி மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

 

இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார்.