Skip to main content

"மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து மக்கள் விடுதலை" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

PUDUCHERRY BJP MEETING PM NARENDRA MODI SPEECH

 

புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் நடந்த பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில், வணக்கம் எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய வளர்ச்சிப் பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளைக் கொண்டு வரும். சிறிது நேரத்திற்கு முன் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. சுயசார்பு திட்டத்தில் புதுச்சேரி முக்கிய பங்காற்றும். புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது; மாநில மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடம் இருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். புதுச்சேரியில் மக்களுக்கான அரசு அமையவில்லை. காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இயங்கிய புதுச்சேரி அரசு, அனைத்து நிர்வாகத்தையும் சீரழித்துவிட்டது.

PUDUCHERRY BJP MEETING PM NARENDRA MODI SPEECH

 

புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு, வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையும். புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை; மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் ஜனநாயகத்தை அனைத்து வகையிலும் அவமதிக்கின்றனர். மீனவ பெண் கூறிய புகாரைத் தவறாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி. குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பிரிவினைவாத அரசியலைச் செய்து வருகிறது. பொய் சொல்வதில் தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெறக் கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். மன்னர் பரம்பரை போல் கட்சியை வழி நடத்துகிறது காங்கிரஸ் கட்சி. பரம்பரை அரசியல் நாடு முழுவதும் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. 

PUDUCHERRY BJP MEETING PM NARENDRA MODI SPEECH

 

புதுச்சேரியில் இளைஞர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை பா.ஜ.க. உருவாக்கித் தரும். புதுச்சேரியில் கல்வி கட்டமைப்பை உருவாக்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறிக்கோளாக இருக்கும். உள்ளூர் மொழியில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிட அரசு கூட்டுறவுத்துறையை சரியாக பராமரிக்கவில்லை. கூட்டுறவுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இம்முறை வாக்களிக்கும்போது வளர்ச்சிக்கு எதிரானவர்களை நிராகரியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி அரசியலுக்குப் புதுச்சேரி மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

 

இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.