Skip to main content

"கரோனா போரில் முக்கிய ஆயுதமாக அதிக பரிசோதனை" -பிரதமர் நரேந்திர மோடி உரை!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

prime minister narendra modi national addressing coronavirus peoples

 

 

கரோனா காலத்தில் 7-வது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

 

டெல்லியில் இருந்து காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது; "ஊரடங்கு காலம் முடிந்து வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளோம். பொருளாதாரம் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

 

அமெரிக்கா, பிரேசிலில் கரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. பல நாடுகளில் கரோனா முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்த நேரத்தில் அது மேலும் அதிகமாக பரவியது. இந்தியாவில் பெருமளவில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. உலக அளவில் மற்ற நாடுகளை விட கரோனாவால் இந்தியாவில் இறப்பு விகிதம் மிகக்குறைவு. கரோனா சிகிச்சைக்கு நம்நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை. நாடு முழுவதும் கரோனா பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் உள்ளன.

 

இந்தியா மேற்கொண்ட அதிகளவிலான பரிசோதனை இந்த போரில் முக்கிய ஆயுதமாக இருந்தது. கரோனா காலத்தில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் மக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. மக்கள் சிலர் முகக்கவசமின்றி வெளியே வருகின்றனர். முகக்கவசமின்றி வெளியே வருவதால் உங்கள் உயிர் மட்டுமின்றி குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து. கரோனா தொற்று இனிமேல் இல்லை என எண்ணி அஜாக்கிரதையாக இருந்து விட வேண்டாம்.

 

கரோனாவுக்கான தடுப்பூசி வரும் வரை நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. மருந்து கிடைக்கும் வரை கரோனாவுக்கான முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். நோய், நெருப்பு போன்றவற்றை நாம் எப்போதுமே எளிதானதாக கருதக்கூடாது. மனிதனைக் காப்பாற்ற உலகளவில் போர் போன்ற கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கெதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது.

 

கரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும். தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தசரா, ஈத், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. பாதுகாப்புடன் கொண்டாட வாழ்த்துகள். தனிநபர் இடைவெளி, முகக்கவசம், கைகழுவுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்து பண்டிகைகளை கொண்டாடுங்கள்" இவ்வாறு பிரதமர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.