/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narend54545.jpg)
சுற்றுச்சூழல்,எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம்,பயங்கரவாத ஒழிப்பு,ஜனநாயம்உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜி- 7 மாநாட்டில் விவாதிக்கஉள்ளதாகபிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
48வது ஜி- 7உச்சி மாநாடுநாளையும் (26/06/2022), நாளை மறுதினமும் (27/06/2022) ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறுஇந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில், அந்த மாநாட்டில்பங்கேற்கபிரதமர் நரேந்திர மோடி, இன்று (25/06/2022) ஜெர்மனி செல்கிறார். மாநாட்டையொட்டி, பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
ஜெர்மனியைத் தொடர்ந்து, ஜூன் 28- ஆம் தேதி அன்று ஐக்கிய அரபுஅமீரகத்திற்கும்செல்லும் பிரதமர், அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர்ஷேக்முகமது பின்சையத்தைசந்திக்கவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)