Prime Minister Modi meets the President

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

Advertisment

அதே சமயம்இலாகா ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. முக்கிய இலாகாக்களை தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கோரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ஜெ.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரளெபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் குடியரசுத் தலைவரை சந்தித்தார். இதனையடுத்து ஆட்சியமைக்க பிரதமர் மோடிக்கு முறைப்படி குடியரசுத் தலைவர் திரளெபதி முர்மு அழைப்பு விடுத்தார். முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக பிரதமர் மோடி இன்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.