Skip to main content

கோவில் கலசங்கள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது! 

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

புதுச்சேரி ஆர்.வி.நகர் மொட்ட தோப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். இன்று காலை பார்த்த போது அந்த ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து அவர் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் சித்தன்குடி பகுதியில் ஸ்ரீ கதிர் முத்துமாரியம்மன் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த குரு தட்சிணாமூர்த்திசாமி கோவில் கோபுரத்தில் இருந்த 3 கலசத்தை திருடினர். 
 

அங்கு உண்டியலை உடைக்கும் சத்தத்தைக் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் கொள்ளையர்கள் அங்கிருந்த கலசத்தை திருடிகொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கீர்த்தி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரு புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். 
 

இதையடுத்து கோரிமேடு போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சின்னையன் பேட்டை பகுதியில் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அவன் ஓட்டிவந்தது அய்யப்பனுடைய ஆட்டோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் ஆர்.வி.நகர் மொட்டத்தோப்பு அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுகுமார்(27) என்பது தெரியவந்தது.

pondicherry Two arrested for stealing temple vials


மேலும் அவர் ஆட்டோவை திருடி சாரம் வேலன் நகர் நேதாஜி தெருவை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் சேர்ந்து சித்தன்குடி கருமுத்து மாரியம்மன் கோவில் கலசங்களை திருடியதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் 15- வயது சிறுவனையும், அவர்கள் கொள்ளையடித்த 3 கலசங்களையும், இரும்பு ராடு ஒன்று மற்றும்  2  லட்சம் மதிப்பிலான ஆட்டோவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 


அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவனை அரியாங்குப்பம் சீர்திருத்தப் பள்ளியிலும், சுகுமாரனை காலாப்பட்டு ஜெயிலிலும் அடைத்தனர். மதியம் 11.00 மணிக்கு கொடுத்த புகாரை போலீசார் விரைந்து செயல்பட்டு, திருடுபோன ஆட்டோ மற்றும் கோவில் கலசங்களை திருடிய கொள்ளையர்களை சில மணி நேரத்தில் பிடித்த கோரிமேடு போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர். கைது செய்யப்பட்ட சுகுமார் மீது 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.