Skip to main content

தேசம் என வரும்போது கருத்தியல் வேறுபாடுகளுக்கு இடமில்லை! - பிரதமர் மோடி உரை!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

modi

 

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், சர் சையத் அஹமத்கானால் கல்லூரியாக தொடங்கப்பட்டு, 1920 ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக மாறியது. இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றியதோடு, பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா சிறப்புத் தபால் தலையை வெளியிட்டார்.


அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக விழாவில், 1964க்கு பிறகு ஒரு பிரதமர் கலந்துகொள்ளவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழத்தில் மோடி ஆற்றிய உரை :


"அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழத்தின் நிறுவனர் சர் சையத், நாட்டின் வளர்ச்சி, மக்களின் சாதி மற்றும் மதத்திற்கு மேலானது என்று கூறியுள்ளார். அதற்கு அவர் ஒரு உதாரணத்தையும் கொடுத்தார், உடல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு உடல் பகுதியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறினார். யாருடைய பின்தங்கிய நிலைக்கும் மதம் காரணமாக இருக்கக்கூடாது என்றும் சர் சையத் கூறியுள்ளார்.  இந்தியா, தன் குடிமக்கள் யாரும் மதத்தால் பின்தங்காத, அனைவருக்கும் தங்கள் இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள சம வாய்ப்பு கிடைக்கிற பாதையில் பயணித்து வருகிறது.

 

நாம் எந்த மதத்தில் பிறந்தாலும், நமது இலட்சியங்ளை, நாட்டின் இலக்குகளோடு  எவ்வாறு இணைத்துக் கொள்ளவது என்பதைப் பார்ப்பது முக்கியம். சமுதாயத்தில் கருத்தியல் பிளவுகள் இருக்கக்கூடும், ஆனால் நாட்டின் வளர்ச்சி என  வரும்போது, மற்ற அனைத்தும் இரண்டாம்பட்சம்தான். அது தேசம் என  வரும்போது, கருத்தியல் வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் பல சுதந்திரப் போராளிகளை உருவாக்கியதால் இதை இங்கே சொல்வது தர்க்கரீதியானது. அவர்களுக்கு அவர்களின் கருத்தியல் வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அவர்கள் அதைச் சுதந்திரத்திற்காக ஒதுக்கி வைத்தனர். சுதந்திரம் அவர்களை ஒன்றிணைத்ததைப் போலவே, நாமும் சுயசார்பு இந்தியாவிற்காக உழைக்க வேண்டும்.

 

நாட்டின் முன்னேற்றத்தை ஒரு அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கக்கூடாது. சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நாம் ஒன்றிணைக்கும்போது, சில சக்திகள் எதிர்மறையை ஊட்டிவிடும். ஆனால், நமது எண்ணங்கள் ஒரு புதிய இந்தியாவில் முதன்மையாகக் கவனம் செலுத்தும்போது, அத்தகைய சக்திகளின் இடம் குறைந்துவிடும். அரசியலும் சமூகமும் காத்திருக்க முடியும், ஆனால் நாட்டின் வளர்ச்சி காத்திருக்க முடியாது. கடந்த நூற்றாண்டில், வேற்றுமைகளால் நிறையநேரம் இழக்கப்பட்டுவிட்டது. இனி இழக்க அதிக நேரம் இல்லை".


இவ்வாறு பிரதமர் மோடி, அலிகார் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.