Skip to main content

விவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோ பேசியதை மறைக்கும் மத்திய அரசு?

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

modi - justin trudeau

 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (10.02.2021) தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிற்கு இந்தியா, கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்திய பிரதமர் மோடியும், கனடாவிற்கு கரோனா தடுப்பூசி வழங்க ஒத்துக்கொண்டார்.

 

இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது நண்பர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், கனடா நாட்டிற்கு தடுப்பூசி வழங்க, இந்தியா தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யும் என உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.

india
                                           இந்தியாவின் அறிக்கை 

 

இந்த நிலையில் இருநாட்டு பிரதமர்கள் உரையாடியது குறித்து, இரு நாடுகளும் தனித்தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா பிரதமர் இந்திய பிரதமரிடம், இந்தியாவின் தடுப்பூசிகள் குறித்து கனடாவின் தேவையை வலியுறுத்தியதாகவும், இந்திய பிரதமரும், இந்தியா அதற்கான முயற்சிகளை செய்யும் என உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் பல முக்கியமான புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து இந்தியாவும் கனடாவும் பகிர்ந்துகொண்ட பொதுவான பார்வைகளை மீண்டும் வலியுறுத்திக்கொண்டனர். காலநிலை மாற்றம் மற்றும் கரோனா தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர ஒப்புக்கொண்டனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

canada
                                                கனடாவின் அறிக்கை 

 

அதேநேரத்தில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து கனடா நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தடுப்பூசி பெறுவதில் இணைந்து செயல்பட இருநாட்டு தலைவர்களும் ஒத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களில் இணைந்து செயல்படுதலின் முக்கியத்துவம் ஆகியவற்றை மீள் உறுதி செய்துகொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனடா நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைகால போராட்டங்கள், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் அறிக்கையில் போராட்டங்கள் குறித்துப் பேசியதாக கூறப்படவில்லை. இதனால் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டம் குறித்து பேசினாரா என்றும், அதனை மத்திய அரசு மறைக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. சமூகவலைதளங்களிலும் இதுதொடர்பான விவாதம் எழுந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.