Skip to main content

கடலை வியாபாரிக்கு லாட்டரியில் விழுந்த 60 லட்சம்!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

கேரள மாநிலம் இருட்டி பகுதியை சேர்ந்தவர் சபீர். இவர் அப்பகுதியில் கடலை வியாபாரம் வருகிறார். இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கு பழக்கம் இருப்பதால் வாரவாரம் லாட்டரி சீட்டு வாங்கி விடுவார். அப்படி அவரால் வாங்க முடியவில்லை என்றாலும், லாட்டரி கடைக்காரரிடம் சொல்லி தனக்கான லாட்டரி சீட்டுக்களை தனியாக கவரில் எடுத்து வைக்க சொல்லிவிடுவார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வெளியூர் சென்ற காரணத்தால் லாட்டரி சீட்டு வாங்க முடியவில்லை. எனவே அவரின் கடைக்கு அருகில் இருந்த லாட்டரி விற்பனை செய்பவரிடம் தனக்கு மூன்று லாட்டரி சீட்டுக்களை தனியாக எடுத்து வைத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவரும் அவ்வாறே எடுத்து வைத்து கவரில் சபீர் என்று எழுதி வைத்திருந்தார்.



இந்நிலையில், அவர் எடுத்து வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு குலுக்கலில் 60 லட்சம் பணம் விழுந்துள்ளது. இதை கேள்விப்பட்ட கடைக்காரர், அதனை சபீரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற சபீர், "தற்போது புதிதாக வீடுகட்ட 15 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதனை இந்த பணத்தை கொண்டு அடைத்து விடுவேன்" என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 A case has been registered against a teenager who was involved in selling Kerala lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

4 people, including a woman, were arrested for selling lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதைப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் ஸ்ரீ ரங்கபவனம் திருமண மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த ரவி (50), ஈரோடு விநாயகர் கோவில் தெரு மூலப்பாளையம் பகுதி சேர்ந்த ஆனந்த் (50), ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (36), சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகரைச் சேர்ந்த தரனீஷ் (21) ஆகியோர் எனத் தெரிய வந்தது.

 

இவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாக பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், 40 கேரளா லாட்டரி சீட்டுகள், ஒரு லேப்டாப், 2 கார்கள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.