Skip to main content

கேரள வெள்ளத்திற்கு 10 ஆயிரம் கொடுத்த PAYTM ஓனர்-விமசிர்த்து தள்ளும் இணையவாசிகள்

Published on 19/08/2018 | Edited on 20/08/2018

 

PAYTM

 

 

 

இந்திய பில்லியனர்களில் ஒருவரானவரும், PAYTM நிறுவனருமான  ராஜசேகர்  கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு  பத்தாயிரம் ரூபாயை  நிதியுதவியாக அளித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவர் தான் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும் அதேபோல் நிதியுதவி அளிக்கவிரும்புவோர் PAYTM பயன்படுத்தி நிதியுதவி அளிக்கலாம் என மொபைல் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

 

PAYTM

 

 

மொத்தம் 11,865 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக உள்ளவரின் மலிவான விளம்பரம் இது, அவருடைய சொத்து மதிப்பிற்கு இது அற்பத்தொகை என அவரை இணையத்தில் விமர்சனங்கள் மூலம் வசைபாடி வந்தனர் இணையவாசிகள். இதனை அடுத்து அந்த பதிவை நீக்கினார் ராஜசேகர்.

சார்ந்த செய்திகள்

Next Story

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Paytm Passtag will be invalid from tomorrow

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் எளிமையாக சுங்க கட்டணங்களை செலுத்துவதற்காக பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பே.டி.எம் பாஸ்டேக் மூலமும் சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை ஆணையம், நாளைக்குள் வாடிக்கையாளர்கள் பே.டி.எம் பாஸ்டேக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் இருப்பு தொகையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் ரீசார்ஜ் செய்ய முடியாது எனவும், அபராதமின்றி சுங்கசாவடிகளைக் கடந்து செல்ல பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் வேறு வங்கிக்கு கணக்கை மாற்ற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

விதிமீறல் புகாரில் சிக்கிய பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஆர்பிஐ ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் ஆர்பிஐ கட்டுப்பாடுகளை தொடர்ந்து பே.டி.எம் பாஸ்டேக் வைத்துள்ளோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அறிவுறுத்தலை வேண்டுகோளாக விடுத்துள்ளது.

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.