Skip to main content

பிராங்க் செய்த மாணவர்கள்; காவல் நிலையத்தில் புகாரளித்த முதல்வர்...

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

 

ghjnghy

 

பாட்னாவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள், அவர்கள் கல்லூரி முதல்வரை ஏமாற்றியதால்,மாணவர்கள் மீது அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். கல்லூரியில் சரஸ்வதி பூஜை நடத்துகிறோம் என கூறி கல்லூரி முதல்வர் மற்றும் துணை தலைவரை மாணவர்கள் அழைத்துள்ளனர். பூஜை நடப்பதாக கூறப்பட்ட அறையில் அவர்கள் இருவரும் நுழைந்த உடன் சத்தமாக ஒலித்த சினிமா இசையுடன் நடன பெண்களும், மாணவர்களும் சேர்ந்து நடனமாடியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முதல்வரும், துணை தலைவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார். அதன் பின் இதனை விசாரிக்க கல்லூரி ஆசிரியர்கள் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் முடிவு எட்டப்படாததால் கல்லூரி முதல்வர், பூஜை குழுவை சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி கல்லூரி முதல்வர் கூறும்போது, 'கண்டிப்பாக இதனை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.