prabu

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

Advertisment

இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என அனைத்து விருதுகளையும் சேர்த்து மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisment

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர். பிரபுதேவா, சங்கர் மகாதேவன், மலையாள நடிகர் மோகன்லால், தமிழகத்தை சேர்ந்த பங்காரு அடிகளார் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56 பேருக்கு வரும் 16 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன.