Skip to main content

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய முதல் மாநிலம் - 'ஒமிக்ரான்' தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

OMICRON VARIANT PRECAUTION MADHYA PRADESH IMPOSED NIGHT CURFEW

 

'ஒமிக்ரான்' தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்தியப் பிரதேச மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. 

 

'ஒமிக்ரான்' பரவலைத் தடுக்கும் வகையில் மத்தியப் பிரதேசத்தில் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதுவரை யாருக்கும் 'ஒமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், அத்தொற்று அதிகம் பாதித்த மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவோரால் தொற்று பரவல் அபாயம் உள்ளதாகவும், எனவே இரவு நேர ஊரடங்கைப் பிறப்பிப்பதாகவும் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். 

 

நாடெங்கும் 'ஒமிக்ரான்' தொற்று அதிகரிக்க தொடங்கிய பின் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மகாராஷ்டிராவில் 'ஒமிக்ரான்' பரவலைத் தடுக்க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின் போது, கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை, அம்மாநில அரசு இன்று அறிவிக்க உள்ளது. 

 

இதற்கிடையே, நாடெங்கும் 'ஒமிக்ரான்' பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து, அனைத்து மாநில சுகாதாரத்துறைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்ணீர் மல்க ஆதங்கப்பட்ட பட்டியலின பெண்; ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்திற்கு நுழைந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், புந்தேல்கண்டி பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள பட்டியலின பெண்களிடம் உரையாடினார். அது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பட்டியலின பெண் ஒருவர், ‘எங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். செருப்பு அணிந்து நாங்கள் கிராமத்திற்கு நுழைந்தால் எங்களை கெட்ட சகுணம் என கூறுவார்கள். செருப்பு அணிந்து ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்? என கேட்பார்கள். தண்ணீர் இறைக்க கிணற்றுக்குள் சென்றால், மணிக்கணக்கில் காத்திருக்கச் சொல்வார்கள். தூரமாகச் சென்று உட்காரு என துரத்துவார்கள். எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள்’ என்று கூறிய உடனே, ‘யார் உங்களை இப்படிச் செய்கிறார்கள்?’ என ராகுல் காந்தி அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த பெண், ‘உயர்சாதியைச் சேர்ந்த மக்கள்தான். பிராமணர்கள், தாக்கூர், அகிர் சமூகத்தினர். எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள். 

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

திருமணத்திற்கு அழைப்பார்கள். ஆனால், குப்பை தொட்டி அருகே எங்களை அமரச் சொல்வார்கள். இல்லையென்றால், கால்வாய் அருகே அமர வைப்பார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது?. எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது. இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கிக்கொண்டோம். ஆனால், எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. இது சுதந்திர நாடு எனச் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும், மிகவும் சோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன். இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன்’ என்ற கூறி தனது செருப்பை கையிலேயே வைத்திருந்தார்.

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

உடனடியாக ராகுல் காந்தி, அந்த பெண் கையில் வைத்துக்கொண்டிருந்த செருப்பை வாங்கி, ‘நீங்கள் அணிந்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி அந்த பெண்ணுக்கு செருப்பை போட்டுவிட்டார். இதனை கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள், கைகளை தட்டி வரவேற்றனர். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.  

Next Story

ம.பி. தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Terrible fire accident in Madhya Pradesh Secretariat

மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் நகரில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று (09-03-24) இந்த தலைமைச் செயலகத்தின் 3வது மாடியில் திடீரென தீ பற்றியது. இங்கு பற்றிய தீ மளமளவென எரியத் தொடங்கி அந்த இடமே புகை மண்டலமானது.

இந்த தீ விபத்து தொடர்பாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.