Skip to main content

ஒடிசா ரயில் விபத்து; கார்கேவின் 11 கேள்விகள்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Odisha Train Accident; Karke's 11 Questions

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து உலக அளவில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 275 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விபத்து குறித்து 11 கேள்விகளை ஆளுங்கட்சியான பாஜக அரசுக்கு முன் வைத்துள்ளார்.

 

Odisha Train Accident; Karke's 11 Questions

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசாவில் நிகழ்ந்தது இந்திய வரலாற்றிலேயே நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்து. விலைமதிப்பற்ற பல உயிர்கள் போயிருக்கிறது. இது ஒவ்வொரு இந்தியனையும் உலுக்கி இருக்கிறது.

 

கேள்வி1: இந்தியாவில் மட்டும் ஒரு நாளில் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது. அப்படிப்பட்ட ரயில்வே துறையில் காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்களை ஒன்பது ஆண்டுகளாக பாஜக ஏன் நிரப்பவில்லை?

 

கேள்வி 2: பயணிகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில் ஓட்டுநர்களை போதிய அளவு நியமிக்காமல், இருக்கும் ஓட்டுநர்களை கூடுதல் நேரம் பணிபுரியும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது?

 

கேள்வி 3: சிக்னல் சிஸ்டத்தில் பழுது இருப்பதாக உயர் அதிகாரி எழுதிய கடிதத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை?

 

கேள்வி 4: ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்தி அதன் தன்னாட்சியை உறுதி செய்யாதது ஏன்?

 

கேள்வி 5: ரயில் தடம் புரளும் நிகழ்வுகள் அதிகரித்த போதிலும் கிழக்கு ரயில்வேயில் உள்ள இருப்புப் பாதைகள் ஏன் முறையாக பராமரிக்கப்படவில்லை?

 

கேள்வி 6: இருப்புப் பாதை சீரமைப்புக்கு தேவையான நிதியை ஒதுக்காதது ஏன்?

 

கேள்வி 7: இந்திய ரயில்வேயில் நான்கு சதவீத வழிதடங்களில் மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது ஏன்?

 

கேள்வி 8: தனியார் மயமாக்கலுக்கு வழிவகுக்கும் வழியிலேயே ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டதா?

 

கேள்வி 9: மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை ரத்து; வயதானவர்களுக்கு மேல் படுக்கை ஒதுக்கப்படுவது என பல வகைகளில் மக்களை சிரமப்படுத்துவது ஏன்?

 

கேள்வி 10: குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிபிஐயிடம் ரயில்வே விபத்து விசாரணை ஏன் ஒப்படைக்கப்பட்டது?

 

கேள்வி 11: கான்பூரில் 2016 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டபோது விசாரித்த என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மறுத்துவிட்டது. அந்த விபத்தில் 150 பேர் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு?

 

என கேள்விகளை முன்வைத்துள்ளார் கார்கே.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.