Skip to main content

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட நான்காவது முறையாக தேதி அறிவிப்பு...

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்குத் தூக்கிலிடப்பட வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

nirbhaya convicts execution date announced for fourth time

 

 

ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி மூன்றுமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்களை தூக்கிலிடுவதற்காக நான்காவது முறையாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் குற்றவாளி பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை காரணமாக மார்ச் 3 அன்று தூக்குத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்