Skip to main content

பசுக்களைக் காக்க புதிய சட்டம்... மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறை, ரூ.10 லட்சம் வரை அபராதம்...

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

new cow safety bill in karnataka

 

பசுக்களை இறைச்சிக்காகக் கொல்வதைத் தடுக்கும் வகையிலான பசுவதை தடுப்பு சட்ட மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. 

 

கடந்த 2010 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் பசுவதை தடுப்பு சட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அம்மாநிலத்தில் இந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்த சட்டங்கள் அமலில் உள்ள குஜராத், உற்றப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று இந்த சட்டம் குறித்து ஆய்வுசெய்த கர்நாடக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுஹான், நேற்று முன்தினம் இதுதொடர்பான சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். 

 

பசுவை இறைச்சிக்காகக் கொல்வதும், அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதும் சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, இந்த செயல்களில் ஈடுபடுவோருக்கு புதிய சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். பசுவைத் துன்புறுத்துவோருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வரையா ஹெக்டே காகேரி குரல் வாக்கெடுப்பு நடத்தி, பசுவதை தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.