Skip to main content

இந்தியாவில் மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று... ஒரே நாளில் 24 ஆயிரம் பேர் பாதிப்பு!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

fgh

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்தது. தற்போது சில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,882 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 140 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 19,957 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்