Skip to main content

வாடகை வீட்டில் இருந்து கொண்டு ஓனர் சொல்வதை கேட்பதில்லை; ஆளுநரை விமர்சித்த மதுரை எம்.பி

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

su venkatesan

 

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் நேற்று முன்தினம் மக்களவையில் எதிரொலித்தது. அப்போது, நீட் விலக்கு மசோதா திரும்ப அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பிக்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

அதனைத்தொடர்ந்து நேற்று காலை, மாநிலங்களவை கூடியதும் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள்,  நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரினார். அதற்கு சபாநாயகர் வெங்கையா நாயுடு அனுமதி மறுக்க திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதன்தொடர்ச்சியாக திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

இந்தநிலையில் நேற்று மாலை மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழக ஆளுநர் ரவி மக்களாட்சியினுடைய தத்துவத்தை அதிகாரத்தைக் குறைக்க முயலுவதாகவும், அவரை திரும்ப பெறவேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி பேசியது வருமாறு; மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள், உரிமைகளையும் கடமைகளையும் பற்றிப் பேசியிருக்கிறார். அது சார்ந்த என்னுடைய கருத்துக்களை இங்கே முன்வைக்கலாம் என நினைக்கிறேன். நான் வாடகை வீட்டிலேயே குடியிருப்பவன். எனது வீட்டின் உரிமையாளருக்கு உடமைகளும், கடமைகளும் உண்டு. என்னுடைய வீட்டின் நிலமும், கட்டிடமும் அவருக்கு சொந்தமானது. அவரது உரிமையிலே நான் தலையிடுவதில்லை, மதிக்கிறேன். என்னைப்போலவே தமிழ்நாட்டில் ஒருவர் வாடகை வீட்டிலே குடியிருக்கிறார். அவர் வாடகை செலுத்துவதில்லை. சட்டம் அவருக்கு அந்த சலுகையை வழங்கியிருக்கிறது. அனால் அவர், தனது உரிமையாளரின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறார். உரிமையாளரின் உரிமையை நிராகரிக்கிறார். உரிமையாளர் கொடுத்த தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார். நான் யாரை பற்றிச் சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

 

குற்றவாளிகளுடைய தண்டனையைக் குறைக்கவும், ரத்து செய்யவும் அதிகாரம் படைத்த ஒருவர், மக்களாட்சியினுடைய தத்துவத்தை அதிகாரத்தைக் குறைக்கவும், இரத்து செய்யவும் துணிவது ஜனநாயகத்திற்கான அவமானம். ஆறரைக்கோடி தமிழர்களுடைய, தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தீர்மானம் என சொல்லுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து. இதே அவையில் நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆனால் எங்கள் குரலுக்கு நீங்கள் செவிபடுப்பதேயில்லை. ஆனாலும் தமிழகத்தினுடைய குரல் ஓயப்போவதில்லை. டிசம்பர் மாதம் காசியிலே பேசிய பிரதமர் அவர்கள் ஒரு வார்த்தையை குறிப்பிட்டார். "காசியை வெறும் வார்த்தைகளால் புரிந்துகொள்ள முடியாது. விழிப்புணர்வே அங்கு வாழ்க்கை. அன்பே அங்கு பாரம்பரியம்" என்றார். அவருடைய உரையாவே இந்த அவையில் மீண்டும் நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். தமிழகத்தை வெறும் வரைபடத்தை பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. மூவாயிரம் ஆண்டு முற்போக்கு சிந்தனையும், சமத்துவ சிந்தனையும், சமூக நீதி தத்துவமும் கொண்ட தமிழகத்தினுடைய குரல், மீண்டும் மீண்டும் இந்த அவையிலே எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

 

நான் மீண்டும் இங்கே அழுத்தமாக சொல்லுவது, நாங்கள் பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலே கூட  மாநிலத்தினுடைய பிரதிநிதிகள் டெல்லி அதிகாரிகளை பார்க்க 10 நாள் காத்திருந்ததாக கேள்விப்பட்டதில்லை. ஆனால் நாங்கள் காத்திருந்து பார்த்து நீட் தேர்வை இரத்து செய்யகோரிய மசோதாவுக்கான மனுவை கொடுத்தோம். மனுவை கொடுப்பதாலேயே நாங்கள் அதிகாரமற்றவர்களாக, நீங்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறிவிடுவதில்லை. ஒன்றியமும் மாநிலமும் சம அதிகாரம் கொண்ட அமைப்புகளென்று அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். எங்களின் குரல் ஒரு மாநிலத்தின் குரலல்ல.  இந்திய மாநிலங்களின் குரல். இந்திய அரசியல் சாசனத்தின் குரல். இந்த குரலுக்கு செவிமடுங்கள். செவிமடுக்க மறுக்கிற நபரை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.