Skip to main content

அன்று அதானி; இன்று மணிப்பூர்... செயல்படுமா நாடாளுமன்றம்?

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Monsoon Session of Parliament manipur issue

 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று(20.7.2023) தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. 15 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமாக 25 நாட்கள் நடைபெற்ற இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருநாள் கூட முழுவதுமாக நடைபெறாமல் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடரில் ராகுல் காந்தி அதானி ஊழல் குறித்து ஹிட்டன்பெர்க் அறிக்கையை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களையும், பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தார். அதேபோல், இந்த விவகாரத்தில் கூட்டு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. கூட்டத் தொடர் நடந்து வரும் நேரத்தில் ராகுல் காந்தி மோடி சமுகம் குறித்து பேசிய வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்ற அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி எழுப்பியதில் நாடாளுமன்றத்தில் அமளியானது. இப்படி தொடர்ந்து அமளியால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒரு விவாதமும் நடைபெறாமல் நிறைவடைந்தது. 

 

இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து, விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை என பல்வேறு விசயங்கள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளது. கடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுக்குள் சில முரண்பாடுகள் இருந்த நிலையில் ஒன்றாக குரல் கொடுக்க முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் என பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து ஐ.என்.டி.ஐ.ஏ(INDIA) அணியை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் கேள்விகள் அனைத்தும் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடராவது முழுமையாகச் செயல்படுமா என்ற பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'தேர்வை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக ஆட்சியை ரத்து செய்யலாம்' - அகிலேஷ் கருத்து

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'Instead of canceling the election, we can cancel the BJP rule' - Akhilesh's opinion

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. நீட் தேர்வு ரத்து குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,'முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இது திடீரென நடக்கும் நிகழ்வல்ல. மத்திய தேர்வு முகமையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான, சமமான தேர்வு முறையை கொண்டு வர வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

nn

இந்நிலையில் இதேபோல சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்தில், 'தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்கிறார்கள்' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story

'நான் ஆர்ப்பாட்டத்துக்கே வரலங்க; விட்ருங்க' - கதறிய முதியவர்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'I am not concerned about the demonstration; -the wailing old man

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்தும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய கோரியும் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட வந்த பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரை வேட்டியுடன் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய அழைத்தபோது, 'நான் இல்லை என்னை விடுங்க.. நான் போறேன்...' என வாகனத்தில் ஏறாமல் ஒருவர் அடம் பிடித்தார். வேட்டியுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர் கைது எனக் காவல்துறை அழைத்தவுடன் கூச்சலிட்டு கதறிய முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.