Skip to main content

கேரள பாஜக தலைவர்களை எச்சரித்த மோடி! 

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Modi warns Kerala BJP leaders
                                                       சுரேந்திரன்
​​​​​

கேரளாவிலும் சட்டசபைத் தோ்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், அங்கு உள்ளாட்சித் தோ்தலில் கடும் தோல்வியைச் சந்தித்த பாஜக, ஆளும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசுக்கு எதிராக வியூகம் அமைத்து வருகிறது. தோ்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக மக்களின் சாதாரண பிரச்சினையைக் கூட பெரிதாக்கும் விதத்தில் மாவட்டம் தோறும் போராட்டங்கள் மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான ஆா்ப்பாட்டங்களை நடத்திவருகிறது பாஜக.

 

ஆனால், போராட்டங்களை விட பாஜகவின் கோஷ்டி பூசல் உயா்ந்து நிற்பதால் தொண்டா்களும் டெல்லி தலைமையும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கேரள பாஜக மாநிலத் தலைவா் சுரேந்திரன், துணைத்தலைவா் ஷோபா, மத்திய மந்திரி முரளிதரன், முன்னாள் தலைவா்கள் கிருஷ்ணதாஸ், கும்மனம் ராஜசேகரன், எம்.டி.ரமேஷ் மற்றும் மாநிலச் செயலாளா் சுரேஷ் எனப் பல கோஷ்டிகள் உள்ளன. இவா்களோடு, மிசோரம் மாநில கவா்னரும் கேரள பாஜக முன்னாள் தலைவருமான ஸ்ரீதரன் பிள்ளையின் தரப்பினரும் ஓரு அணியாக உள்ளனா். இதில் சுரேந்திரன் தலைவரான ஆரம்பத்தில் இருந்தே நேரடியாகக் கோஷ்டியைக் களத்தில் காட்டுபவா் ஷோபா தான்.

 

அது கட்சி அலுவலகமாக இருந்தாலும், பொது இடமாக இருந்தாலும் நேரடியாகவே ஒருவருக்கொருவா் வாய்ப் பேச்சில் மோதிக் கொள்வார்கள். போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் கூட இரு அணியும் தனித் தனியாகவே நிற்பார்கள். மத்திய மந்திரியான முரளிதரன் கோஷ்டி, சில நேரங்களில் மாநிலத் தலைவா் சுரேந்திரன் கோஷ்டியுடன் ஒத்துப்போகும். அதே போல் மிசோரம் கவா்னா் ஸ்ரீதரன் பிள்ளையின் தரப்பின் ஆதரவு சில நேரங்களில் ஷோபாவுக்கும் உண்டு. அதேபோல் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் முக்கிய நிர்வாகி முகுந்தனின் ஆதரவும் ஷோபாவுக்கு உள்ளது. இதனால், ஷோபா சின்ன பிரச்சினையாக இருந்தாலும் உடனே டெல்லி தலைமைக்குக் கொண்டு போய்விடுவார். இது மாநிலத் தலைவா் சுரேந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

Modi warns Kerala BJP leaders
                                                              ஷோபா


உள்ளாட்சித் தோ்தலின் தோல்விக்குக் காரணம் பாஜக தலைவா் சுரேந்திரனின் தவறான நடவடிக்கைகளும், முடிவுகளும் தான் என்றும் சொந்த மாவட்டத்தில் கூட ஒரு நகராட்சியைக் கூட பிடிக்க முடியவில்லை என்றும் முதலில் வாய்த் திறந்து குற்றம் சாட்டிய ஷோபாவின் பேச்சு, சுரேந்திரனுக்கு எரிச்சலை உருவாக்கியது. இந்த நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தகுதியானவா்களுக்கு வேலை கொடுக்காமல் பின்வாசல் வழியாக தகுதியற்றவா்களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறி இளைஞா்களும் காங்கிரசாரும் தலைமைச் செயலகம் முன் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இதில், ஷோபாவும் அந்த இளைஞா்களுக்கு ஆதரவாக தொடா் உண்ணாவிரதம் நடத்தினா். அதற்கு பாஜக தலைமையும் பாஜக’வின் இளைஞா் அமைப்பும் ஆதரவு கொடுக்கவில்லை.

 

இது ஷோபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி சென்ற ஷோபாவும், சுரேந்திரனும் மாறி மாறி புகார்களை மோடி, அமித்ஷா, நட்டாவிடம் அள்ளி வீசினார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கொச்சிவந்த மோடி, கோஷ்டியினா் எல்லாரையும் நேரில் அழைத்து எச்சரித்ததோடு வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலையில், கேரளாவில் ஓரே ஓரு எம்எல்ஏவோடு இருக்கும் பாஜக இத்தனை கோஷ்டிகளை சமாளித்து எப்படித் தோ்தல் இலக்கை அடையப் போகிறதோ? இந்நிலையில் 'மெட்ரோ மேன்' எனக் கூறப்படும் ஸ்ரீதரன், “நான் பாஜகவில் சேரப் போகிறேன். கேரளாவில் முதல்வா் ஆவது தான் எனது கனவு” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கிற கோஷ்டி போதாது என்று அடுத்து இன்னொரு கோஷ்டியா? எனத் தலையில் அடித்துக் கொல்கிறார்கள் பாஜகவினா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.