Skip to main content

கேரள பாஜக தலைவர்களை எச்சரித்த மோடி! 

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Modi warns Kerala BJP leaders
                                                       சுரேந்திரன்
​​​​​

கேரளாவிலும் சட்டசபைத் தோ்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், அங்கு உள்ளாட்சித் தோ்தலில் கடும் தோல்வியைச் சந்தித்த பாஜக, ஆளும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசுக்கு எதிராக வியூகம் அமைத்து வருகிறது. தோ்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக மக்களின் சாதாரண பிரச்சினையைக் கூட பெரிதாக்கும் விதத்தில் மாவட்டம் தோறும் போராட்டங்கள் மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான ஆா்ப்பாட்டங்களை நடத்திவருகிறது பாஜக.

 

ஆனால், போராட்டங்களை விட பாஜகவின் கோஷ்டி பூசல் உயா்ந்து நிற்பதால் தொண்டா்களும் டெல்லி தலைமையும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கேரள பாஜக மாநிலத் தலைவா் சுரேந்திரன், துணைத்தலைவா் ஷோபா, மத்திய மந்திரி முரளிதரன், முன்னாள் தலைவா்கள் கிருஷ்ணதாஸ், கும்மனம் ராஜசேகரன், எம்.டி.ரமேஷ் மற்றும் மாநிலச் செயலாளா் சுரேஷ் எனப் பல கோஷ்டிகள் உள்ளன. இவா்களோடு, மிசோரம் மாநில கவா்னரும் கேரள பாஜக முன்னாள் தலைவருமான ஸ்ரீதரன் பிள்ளையின் தரப்பினரும் ஓரு அணியாக உள்ளனா். இதில் சுரேந்திரன் தலைவரான ஆரம்பத்தில் இருந்தே நேரடியாகக் கோஷ்டியைக் களத்தில் காட்டுபவா் ஷோபா தான்.

 

அது கட்சி அலுவலகமாக இருந்தாலும், பொது இடமாக இருந்தாலும் நேரடியாகவே ஒருவருக்கொருவா் வாய்ப் பேச்சில் மோதிக் கொள்வார்கள். போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் கூட இரு அணியும் தனித் தனியாகவே நிற்பார்கள். மத்திய மந்திரியான முரளிதரன் கோஷ்டி, சில நேரங்களில் மாநிலத் தலைவா் சுரேந்திரன் கோஷ்டியுடன் ஒத்துப்போகும். அதே போல் மிசோரம் கவா்னா் ஸ்ரீதரன் பிள்ளையின் தரப்பின் ஆதரவு சில நேரங்களில் ஷோபாவுக்கும் உண்டு. அதேபோல் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் முக்கிய நிர்வாகி முகுந்தனின் ஆதரவும் ஷோபாவுக்கு உள்ளது. இதனால், ஷோபா சின்ன பிரச்சினையாக இருந்தாலும் உடனே டெல்லி தலைமைக்குக் கொண்டு போய்விடுவார். இது மாநிலத் தலைவா் சுரேந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

Modi warns Kerala BJP leaders
                                                              ஷோபா


உள்ளாட்சித் தோ்தலின் தோல்விக்குக் காரணம் பாஜக தலைவா் சுரேந்திரனின் தவறான நடவடிக்கைகளும், முடிவுகளும் தான் என்றும் சொந்த மாவட்டத்தில் கூட ஒரு நகராட்சியைக் கூட பிடிக்க முடியவில்லை என்றும் முதலில் வாய்த் திறந்து குற்றம் சாட்டிய ஷோபாவின் பேச்சு, சுரேந்திரனுக்கு எரிச்சலை உருவாக்கியது. இந்த நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தகுதியானவா்களுக்கு வேலை கொடுக்காமல் பின்வாசல் வழியாக தகுதியற்றவா்களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறி இளைஞா்களும் காங்கிரசாரும் தலைமைச் செயலகம் முன் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இதில், ஷோபாவும் அந்த இளைஞா்களுக்கு ஆதரவாக தொடா் உண்ணாவிரதம் நடத்தினா். அதற்கு பாஜக தலைமையும் பாஜக’வின் இளைஞா் அமைப்பும் ஆதரவு கொடுக்கவில்லை.

 

இது ஷோபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி சென்ற ஷோபாவும், சுரேந்திரனும் மாறி மாறி புகார்களை மோடி, அமித்ஷா, நட்டாவிடம் அள்ளி வீசினார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கொச்சிவந்த மோடி, கோஷ்டியினா் எல்லாரையும் நேரில் அழைத்து எச்சரித்ததோடு வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலையில், கேரளாவில் ஓரே ஓரு எம்எல்ஏவோடு இருக்கும் பாஜக இத்தனை கோஷ்டிகளை சமாளித்து எப்படித் தோ்தல் இலக்கை அடையப் போகிறதோ? இந்நிலையில் 'மெட்ரோ மேன்' எனக் கூறப்படும் ஸ்ரீதரன், “நான் பாஜகவில் சேரப் போகிறேன். கேரளாவில் முதல்வா் ஆவது தான் எனது கனவு” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கிற கோஷ்டி போதாது என்று அடுத்து இன்னொரு கோஷ்டியா? எனத் தலையில் அடித்துக் கொல்கிறார்கள் பாஜகவினா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.