கரோனா பேரிடர் காலத்தில், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் மூலமாக நடத்தும் வகுப்புகள் அனுமதிக்கப்பட்டதுதான் என்றும், செல்லுப்படியாகக் கூடியது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் எழுதியுள்ள கடிதத்தில், 'தியரி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம். கரோனா பேரிடர் முடிந்த பின்னர் கல்லூரிகள் திறக்கப்படும்போது, செய்முறை (பிராக்டிகல்) மற்றும் கிளினிகல் பயிற்சி வகுப்புகளை சமன் செய்து கொள்ளலாம்.
மருத்துவக் கல்வியில் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கவில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியது, தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில், அயல்நாட்டு மருத்துவ பல்கலைகழகங்கள் நடத்தும் வகுப்புகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆகஸ்ட் 13- ஆம் தேதி அளித்த விளக்கமாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்ஃபோன் வெடித்ததில் மாணவர் படுகாயமடைந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்றுக்குப் பிறகு இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளித்திருந்தது. இருந்தாலும் தொடர்ந்து கரோனா பாதிப்பு இருந்ததால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புக்களை எடுக்கத் துவங்கினர். தற்போது இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டுவருகின்றன.
பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புக்கள் நடைமுறையில் இருந்துவருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் ஆன்லைன் வழியாக பாடத்தைக் கவனித்து வந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மாணவனின் செல்ஃபோன் வெடித்துச் சிதறியது. இதில் மாணவன் கன்னம், காது உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பலரும் வீடுகளில் முடங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. கரோனாவின் தாக்கம் முழுவதுமாக குறையாத காரணத்தால் குழந்தைகளுக்குப் பள்ளிகளைத் திறப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பள்ளிகள் திறக்காததால் இன்றுவரை ஆன்லைன் வகுப்புகளை அடிப்படையாகக் கொண்டே பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. மேலும், இன்றைய சூழலில் அலுவலக வேலை என்றாலும் சரி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் என்றாலும் சரி அனைத்துமே டிஜிட்டல் சேவையை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
பொழுதை வீணாக கழிப்பார்கள் என்ற எண்ணத்தில் பொதுவாகவே குழந்தைகளிடம் நாம் மொபைல் ஃபோனை கொடுக்க மாட்டோம். ஆனால் இன்று ஆன்லைன் வகுப்புகளுக்காக நாமே நமது குழந்தைகளிடம் மொபைல் ஃபோனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்கள் மொபைல் ஃபோன்கள், பிற மின்சாதன பொருட்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதுடன், வேறு வகையிலான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது ஸ்மார்ட் ஃபோன் வெடித்துச் சிதறியதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார். வியட்நாம் நாட்டின் நிகே அன் மாகாணத்தில் நாம் டென் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதாகும் 5ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று மாலை ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருந்தார்.
அந்த மாணவர் மொபைலை சார்ஜில் போட்டவாறு, காதுகளில் இயர் ஃபோனை மாட்டி பாடங்களைக் கவனித்து வந்தபோது திடீரென மாலை 4 மணியளவில் அந்த மாணவர் பயன்படுத்திய மொபைல் பேட்டரி அதிக சூடால் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தினால் அந்த மாணவரின் உடையில் தீப்பற்றி எரிந்திருக்கிறது. காயத்தில் தவித்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின், உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாம் டென் மாவட்டத்தில் கடந்த மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததால், வாரத்தில் ஒருநாள் மட்டும் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் பாடம் நடத்திவருகின்றனர். இந்நிலையில்தான் இந்த விபத்தில் மாணவர் உயிரிழந்திருக்கிறார்.