Skip to main content

2019 -தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்டுகள் மோடியை குறிவைக்கலாம்?? -மத்திய உள்துறை அமைச்சகம்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

 

modi

 

 

 

கடந்த எட்டாம் தேதி தேசிய பாதுகாப்பு அமைப்பகம் மாவோயிஸ்ட் போன்ற அமைப்புகளால் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என தெரிவித்திருந்தது. பிரதமர் மோடியின் சாலை வழி பிரச்சாரங்களை பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலை போன்ற திட்டத்தை மாவோயிஸ்ட் அமைப்புகள் நடத்த திட்டமிட்டு வருகின்றன எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. தற்பொழுது மோடி மீதான அச்சுறுத்தல் இன்னும் அதிகரித்து வருகிறது எனவும் 2019 -ஆம் ஆண்டு பொதுதேர்தலுக்கு முன்னே குறிவைக்கப்படும் நபர்களில் பிரதமர் மோடி உள்ளார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

எனவே பிரதமர் மோடிக்கும் அவரது பாதுகாப்பு அமைப்பிற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பல நிபந்தனைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. எஸ்பிஜி எனப்படும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும், சிபிஜி எனப்படும் பிரதமருக்கு நெருக்கமாக இருந்து பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு அணிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 


ரொட்ஷோ எனப்படும் சாலையோரம் கூடியுள்ள மக்களை எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரெனெ சந்திப்பது போன்றவைகளை பிரதமர் தவிர்க்க வேண்டும் என அவரது சிறப்பு பதுகாப்பு பிரிவினரால் ஏற்கனவே மோடி அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பினால் இன்னும் பலத்த பாதுகாப்புகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது.   


 

அதுபோல் அனைத்து மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பிரதமருக்கு அச்சறுத்தல் தரக்கூடிய அடையாளம் தெரியாத அமைப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளது. மேலும் மாவோயிஸ்டுகளின் பாதிப்புகள் அதிகமுள்ள மாநிலங்களான மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிஷா, பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளும்பொழுது மற்ற மாநிலங்களுக்கு பயணப்படும் பொழுது ஏற்படுத்தப்படும் பாதுகாப்புகளை விட அதிகப்படியான பாதுகாப்பு நவடடிக்கை இருக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.