Skip to main content

மனிதத்தன்மையற்றது: சமூகவலைதள விமர்சனங்களால் பின்வாங்கிய மணிப்பூர் அரசு!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

myanmar refugees

 

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் மியான்மரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது, இராணுவம் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை 510 பேர், இராணுவத்தின் தாக்குதலில் பலியாகிவுள்ளதாகக் மியான்மர் நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மர் இராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

 

மியான்மர் இராணுவத்தின் தாக்குதலாலும், அங்கு நடைபெறும் வன்முறை நிகழ்வுகளாலும் பாதிக்கப்பட்ட மக்கள், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இந்தநிலையில், இந்தியாவில் மியான்மரை ஒட்டி அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் அரசு, கடந்த வெள்ளிக்கிழமை, எல்லையோர மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் மூலமாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில், மியான்மரில் இருந்து வரும் மக்களுக்கு உணவோ, இருப்பிடமோ வழங்கக்கூடாது என்றும், யாருக்கேனும் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படியில் சிகிச்சை அளிக்கலாம் என்றும், தஞ்சம் கேட்டு வருபவர்களின் கோரிக்கையைப் பணிவாக மறுத்துவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

 

இந்த உத்தரவு மனிதத்தன்மையற்றது என சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஐக்கிய நாடுகளுக்கான மியான்மர் தூதரும், மியான்மர் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும்படி இந்திய அரசுக்கும், மியான்மர் நாட்டை ஒட்டியுள்ள இந்திய மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்தார்.

 

இந்நிலையில் மணிப்பூர் அரசு, இந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதாக அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மணிப்பூர் மாநில அதிகாரப்பூர்வ வாட்டரங்கள், எல்லையோர மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு மீண்டும் எழுதிய கடிதத்தில், முந்தைய கடிதத்தில் கூறப்பட்ட விஷயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன. எனவே அந்தக் கடிதம் திரும்பப் பெறப்படுகிறது. காயமடைந்த மியான்மர் மக்களை இம்பால் (மணிப்பூர் தலைநகர்) அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பது உள்ளிட்ட மனிதாபிமான செயல்களை அரசு தொடர்ந்து செய்யும். மாநில அரசு தொடர்ந்து அகதிகளுக்கு எல்லா உதவிகளையும் வழங்கும் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளன. 

 

இந்திய அரசு ஏற்கனவே, மியான்மரில் இருந்து வருபவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்தை வழங்கக்கூடாதென்றும், மியான்மர் மக்கள், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்குமாறும் மியான்மர் எல்லையை ஒட்டிய மாநிலங்களை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பலத்த பாதுகாப்புடன் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Re-polling in Manipur with tight security

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள்  நிகழ்ந்தன. 

Re-polling in Manipur with tight security

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 11 வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்று (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

‘மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு’ - தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Repolling in Manipur Election Commission action

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு  வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு நாளை மறுநாள் (26.04.2024) ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளது.

இத்தகைய  சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்வம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள்  நிகழ்ந்தன.

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 11 வாக்குப்பதிவு மையங்களில் நாளை (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் வன்முறை காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு  நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.