Skip to main content

மனைவிக்கு 'தாஜ்மஹாலை' கட்டி பரிசளித்த நபர்! (படங்கள்)

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

 

மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் சௌக்சே, தாஜ்மஹாலை போன்ற ஒரு வீட்டினை கட்டி தனது மனைவிக்கு பரிசளித்துள்ளார். 4 படுக்கையறைகளுடன் கூடிய இந்த வீடு தாஜ்மஹாலின் 3டி படத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 

மொத்தம் 90 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு இரண்டு தளங்களோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் சமையலறை, நூலகம், தியான அறை ஆகியவையும் அமைந்துள்ளது. தாஜ்மஹாலையும், தாஜ்மஹாலை போலவே இருக்கும் பீபி கா மக்பராவையும் நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து இந்த வீட்டை கட்டியுள்ளார்.

 

புர்ஹான்பூருக்கு வரும் எந்த சுற்றுலாப் பயணியும் தவற விடக் கூடாத காட்சிப் பொருளாகத் தனது வீடு இருக்குமென இந்த வீட்டைக் கட்டிய ஆனந்த் பிரகாஷ் சௌக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்