Skip to main content

'புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்' - சேவல் மீது புகார் கொடுத்த டாக்டர் 

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

madhya pradesh doctor complaint against cock make sound

 

காலம்காலமாக சேவல் காலையில் கூவிய பிறகு மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து தங்களது அன்றாட வேலைகளை செய்ய தொடங்குகின்றனர். கடிகாரங்கள் இல்லாத காலத்தில், மக்களை காலையில் எழுப்பும் அலாரமாக சேவல் இருந்திருக்கிறது.  என்னதான் நகரத்தில் வாழும் மக்கள் கடிகாரத்தில் அடிக்கும் அலாரத்தை பார்த்து தூக்கத்தில் இருந்து எழத் தொடங்கிவிட்டாலும், கிராமங்களில் சேவல் கூவிய பிறகே எழும் நடைமுறையை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படியாக மனித வாழ்வில் பிணைந்து இருக்கும் சேவல் மற்றும் சேவலின் கூவல் மீதே ஒருவர் போலீசில் புகார் அளித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருபவர் மருத்துவர் அலோக் மோடி. இவர் தினமும் இரவில்  பணிக்குச் சென்று விட்டு காலையில் வீட்டிற்கு வந்து தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி இவர் காலையில் வீட்டில் தூங்கும்போது பக்கத்து வீட்டில் இருக்கும் சேவல் கூவுவது, அலோக் மோடிக்கு தொந்தரவாக இருந்திருக்கிறது. இதனால் தினமும் இரவுப்பணியை முடித்துவிட்டு காலையில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அலோக் மோடி, சேவல் மீது பலாசியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

அந்தப் புகாரில், “என்னுடைய பக்கத்து வீட்டில் பெண் ஒருவர் சேவல், கோழி உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அதில் அவர் வளர்த்து வரும் சேவல் தினமும் காலை 5 மணிக்கு கூவுவதால் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு வந்து  காலையில் தூங்கலாம் என்று பார்த்தால் இந்த சேவல்கள் என்னுடைய தூக்கத்தையே கெடுத்து விடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதுகுறித்து பலாசியா காவல்நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது, “முதலில் இரு தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் சுமூக முடிவு எட்டாவிட்டால், சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.