Skip to main content

சிறுமியைக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது!

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

Leopard that 6 year old girl caught

 

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்று ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுத்தை அல்லது வனவிலங்குகள் ஏதேனும் இழுத்துச் சென்றிருக்கலாம் என அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக மகள் காணாமல் போனது குறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு முழுக்க வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் வனத்தின் பல பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

 

தொடர் தேடுதலுக்குப் பிறகு நேற்று முன்தினம் காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்,  திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்ட இருந்த அறிவிப்பில், 'திருமலை நடைபாதையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். வனவிலங்கு தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பலகட்ட நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுக்கும். திருமலை நடைபாதையில் ஒவ்வொரு 40 அடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

மேலும் சிறுமியைக் கொன்ற வனவிலங்கைப் பிடிக்க வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். வன விலங்கைப் பிடிக்க 2 இடங்களில் கூண்டும், வன விலங்கைக் கண்காணிக்கும் பொருட்டு 30 இடங்களில் நைட் விஷன் கேமராக்களும் பொருத்தி இருந்தனர். இந்நிலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியுள்ளது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக  திருப்பதி மலைப்பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்லத் தடை விதித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மீன்பிடித் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து; வெளியான பகீர் காரணம்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Terrible fire at fishing port release of reason

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், படகுகளில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் அங்கிருந்த 30 படகுகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகின. மேலும் 18 படகுகள் பகுதியளவு சேதமடைந்தன. இந்த பயங்கர தீ விபத்து சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

 

அதே சமயம் அடையாளம் தெரியாத நபர், படகுகளுக்குத் தீ வைத்ததாக மீனவர்கள் சந்தேகமடைந்திருந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் படகுகளுக்கான எரிபொருளாக டீசல், பெட்ரோல் ஆகியவற்றைப் படகுகளில் இருப்பு வைத்திருப்பர். மேலும் மீனவர்கள் கடலில் சமையல் செய்ய மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களை இருப்பு வைத்திருப்பர். இதன் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில் தீ விபத்திற்கான பகீர் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது அணக்காமல் வீசப்பட்ட சிகரெட்டே காரணம் எனத் தெரியவந்துள்ளது. மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த படகில் அமர்ந்து வாசுப்பள்ளி நானி என்பவரும் அவரது மாமா சத்தியம் ஆகிய இரண்டு பேரும் மது அருந்திய பிறகு புகை பிடித்துவிட்டு சிகரெட்டை அணைக்காமல் வீசிச் சென்றுள்ளனர். இந்த தீ அருகில் இருந்த நைலான் வலையில் தீ பிடித்து பரவி படகில் இருந்த டீசல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து மற்ற படகுகளுக்கும் தீ பரவியுள்ளது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தீ விபத்து காரணமான வாசுப்பள்ளி நானியும், சத்தியம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிக கனமழை; 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

very heavy rain Orange alert for 2 days

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (22.11.2023), நாளை மறுநாள் (23.11.2023) என 2 நாட்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என்பதால் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

அதேபோன்று கேரளாவிலும் இன்று (21.11.2023) முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கும், நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்