Skip to main content

"அரசியல் இல்லை; இது சினிமா"- 'பீஸ்ட்' படம் குறித்து கே.ஜி.எஃப். ஹீரோ யஷ்!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

 

கடந்த 2018- ஆம் ஆண்டு, யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம், இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்திய சினிமா ரசிகர்களால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தது படக்குழு. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

இந்த நிலையில், கே.ஜி.எஃப்.- 2 படம் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும், அதற்கான ட்ரெய்லர் இன்று (27/03/2022) மாலை 06.40 மணிக்கு வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

கே.ஜி.எஃப்.- 2 படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன், படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரானது 2 நிமிடங்கள் 56 வினாடிகளை கொண்டது. யூடியூப் பக்கத்தில் வெளியான தமிழ் மொழி ட்ரெய்லரை, சில மணி நேரத்திலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கை  20 லட்சத்தைக் கடந்துள்ளது. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

இதனிடையே, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இன்று (27/03/2022) மாலை 06.00 மணிக்கு கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் உங்கள் படமும் வெளியாகவுள்ளது, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? போட்டி எப்படி இருக்கும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் யஷ், "கே.ஜி.எஃப். Vs பீஸ்ட் என்று நினைக்கவில்லை; கே.ஜி.எஃப். அண்ட் பீஸ்ட் என்று நினைக்கிறேன். தேர்தலில் தான் ஒருவருக்கு ஒரு ஓட்டு இருக்கும். அதிக ஓட்டு யாருக்கு விழுகிறதோ அவர்கள் ஜெயிப்பார்கள். மற்றவர்கள் தோல்வி அடைவார்கள். இது அரசியல் கிடையாது; சினிமா. இதில் ஒருவருக்கு ஒரு ஓட்டு கிடையாது; இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும். விஜய் மீது எனக்கு மதிப்பு உள்ளது. நானும் விஜய் படம் பார்ப்பேன். எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.