Skip to main content

லேட்டஸ்ட் ஹைடெக் கஞ்சா கடத்தல்.. அதிர்ச்சியில் உறைந்து போன கேரள காவல்துறை! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

கடத்தல் பஜாரில் இது புதுசு என்பதால் ஹைடெக் டெக்னிக்கல் முறையான கடத்தல் என்கிறார்கள் கேரள போலீசார். மேலும், இதனைக் கண்டு பிடிக்க மூளையைக் கசக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சரியமும் அதிசயமுமாய்.

 

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் புளியரை வனப்பகுதியை ஒட்டி கேரளாவின் நுழைவுவாயில் அமைந்துள்ளது. இரண்டு எல்லைப் புறங்களிலும் தமிழக கேரள அரசுகளின் தலா மூன்று சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த எல்லைப் புறங்களை அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு மாநில வாகனங்களும் கடந்து செல்கின்றன. குறிப்பாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்குத் தேவையான உள்ளங்கால் முதல் உச்சி வரையிலான பொருட்கள் வாகனங்களில் செல்கின்றன. இதில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்களும் கடத்தப்படுவதுண்டு. பலதுகள் தப்பித்தாலும் சிலதுகள் சிக்குவதுண்டு.

 

இந்த நிலையில், கேரளாவின் கொல்லம் ரூரல் எஸ்.பி.யான கே.பி.ரவிக்கு தமிழகம் வழியாக கேரளாவின் ஆரியங்காவுப் பாதையில் வருகிற கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுகிறது எனும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அலர்ட் ஆன எஸ்.பி. தனது க்ரைம் ஸ்குவார்டான டி.ஒய்.எஸ்.பி. அசோக்குமார், புனலூர் டி.ஒய்.எஸ்.பி. வினோத்குமார், தென்மலை எஸ்.ஐ.சாலு உள்ளிட்ட போலீஸ் டீமை அனுப்புகிறார்.

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

இந்த டீம் தமிழக புளியரை எல்லையிலிருக்கும் கேரளாவின் ஆரியங்காவு கோட்டை வாசல் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கண்காணிப்பிலிருந்திருக்கிறார்கள். மாலை சுமார் 6 மணிக்கு மேல் எல்லையைக் கடந்த ஆந்திரப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றை மடக்கிய டி.ஒய்.எஸ்.பி. அதிலிருந்த இருவரையும் விசாரித்திருக்கிறார். தங்களுக்குத் தமிழும் மலையாளமும் தெரியாது. தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும், சபரிமலை போவதாகவும் அவர்கள்  தெரிவித்திருக்கின்றனர்.

 

சபரிமலைக்குச் செல்வதாகத் தெரிவித்த அவர்கள், மாலை அணியாமல் சாதாரண உடையில் அவர்களிருந்ததால் சந்தேகப்பட்ட போலீசார் அந்தக் காரின் மூலை முடுக்கெல்லாம் இரண்டு மணிநேரம் ஸ்கேன் செய்தும் சந்தேகப்படும்படியான பொருட்கள் சிக்கவில்லை. சலித்துப்போன டி.ஒய்.எஸ்.பி. தற்செயலாகக் காரின் டோரைத் திறந்த போது அதன் உட்புறம் ஒன்றின் ஷீட் சமமாக இல்லாமல் மேடும் பள்ளமுமாய் இருப்பது தெரிய, சந்தேகப்பட்ட அவர் அந்த ஷீட்டை ஆயுதம் கொண்டு திறந்த போது டோரின் உள் அறைகளில் பெரிய பெரிய பொட்டலம் திணிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைப் பிரித்துப் பார்த்தபோது, அத்தனையும் அசல் கஞ்சா என்று தெரிந்ததும் அதிர்ந்து விட்டனர். இது போன்று காரின் நான்கு டோர்களிலும் மறைத்து வைக்கப்பட்ட 30 பாக்கெட்களில் சுமார் 65 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது.

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

விசாரணையில் அவர்கள் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செம்பெட்டி பிரம்மையா, சொலசானி ஹரிபாபு என்று தெரிய வந்திருக்கிறது. தெலங்கானாவிலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா, கொல்லம் திருவனந்தபுரம் ஏஜெண்ட்களுக்கு சப்ளை செய்யக்கொண்டு செல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

 

தெலங்கானாவின் மாவோயிஸ்ட்கள் மறைந்து வாழும் பகுதியில் விளைகிற முதல் தர கஞ்சா இது. இங்குள்ள மார்க்கெட்டின் படி இதன் ஹோல்சேல் விலை ஒரு கோடி. ரீட்டெய்லில் விலை டபுள். மொத்தக் கஞ்சாவையும் காரையும் கைப்பற்றினாலும் பிடிபட்டவர்கள் கூலிக்கு கடத்துபவர்கள். இதன் டோட்டல் ப்ளானையும் அறிய மேல் விசாரணைக்காகத் தென்மலைக் காவல் நிலையம் கொண்டு போவதாகத் தெரிவித்த க்ரைம் பிரான்ஞ் டி.ஒய்.எஸ்.பி.யான அசோக்குமார், கடத்தல் வகையில் புது டெக்னிக் அதனால்தான் ஆந்திரா, தமிழகம் தப்பி எங்களிடம் சிக்கியுள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.