Skip to main content

தமிழில் "96" மலையாளத்தில் "த்ரிஷியம்" பட பாணியில் நடத்தப்பட்ட கொலை!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

கேரளா மாநிலம் கொச்சி உதயம்பேரு காவல்நிலையத்தில் மனைவி வித்யா (43) காணவில்லை என்று கடந்த செப்டம்பர் 25- ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும்  பிரேம்குமார்(48) புகார் மனு கொடுக்க போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினார்கள். பிரேம்குமார் கொடுத்த ஓவ்வொரு தகவலின் அடிப்படையில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் துலக்கவில்லை. பிரேம்குமாரும் போலீசுக்கு சந்தேகம் இல்லாத படி நடந்து கொண்டார்.
 

இந்த நிலையில் போலீசார் முக்கியமான ஓருவரை பிடித்து விசாரிக்க இருப்பதாகவும், அவர் மீது தான் சந்தேகம் என்று பிரேம்குமாரின் காதுக்கு எட்டும்படி தகவலை கசிய விட்டனர். அதனால் பிரேம்குமார் தன்னை இந்த வழக்கில் போலீசார் விசாரிக்க கூடாது என்று கொச்சின் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து போலீசாருக்கு பிரேம்குமார் மீது சந்தேகம் வலுத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் பிரேம்குமாரை பிடித்து விசாரித்தனர். 

KERALA INCIDENT POLICE INVESTIGATION TAMIL FILM 96


அப்போது மனைவியை பள்ளி காதலியுடன் சேர்ந்து வாழுவதற்காக கொலை செய்து நாடகமாடியதாக பிரேம்குமார் ஒப்பு கொண்டார். இதையடுத்து கொலை குறித்து கூறுகையில், பிரேம்குமார் ஹோட்டல் ஓன்றில் வேலை பார்க்கும் போது அங்கு வந்த வித்யாவிடம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருடைய குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக தான் சென்று கொண்டியிருந்தது.
 

இந்தநிலையில் தான் ஹைதராபாத்தில் கணவன் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வந்த சுனிதா (48) இவா்களின் சந்தோஷமான வாழ்க்கைக்குள் நுழைகிறாள். பிரேம்குமாரும் சுனிதாவும் 1994- 95 யில் திருவனந்தபுரத்தில் 10- ஆம் வகுப்பு ஒன்றாக படித்தவர்கள். அப்போது அவர்களுக்குள் சக மாணவர்கள் என்ற பழக்கத்தை மீறி இருவரும் ஒருலையாக காதலித்து இருக்கிறார்கள். அதோடு பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் தான் அந்த ஆண்டில் படித்த மாணவர்களின் கெட்டு கெதர் (get together) நிகழ்ச்சி கடந்த மே மாதம் 25-ம் தேதி நடந்தது.
 

இதில் பிரேம்குமார் தனது மனைவி வித்யாவுடனும் சுனிதா தனது கணவா் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார். அப்போது பிரேம்குமாரும், சுனிதாவும் நெருங்கிய பழகி பேசியதில் பழைய நினைவுகள் ஞாபகம் வரவே இருவரும் நெருக்கமாகி இருக்கிறார்கள். இதன் விளைவு சுனிதா கணவன் குழந்தைகளை விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நா்ஸ் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். பிரேம்குமாரும் சுனிதாவும் கணவன் மனைவி போல் வாழ தொடங்கினார்கள். இது வித்யாவுக்கு தெரிய வர அவள் கண்டித்ததால் வித்யாவை கொலை செய்து இருவரும் கணவன் மனைவியாக வாழ முடிவு செய்தனர்.
 

இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சையில் இருந்த வித்யாவுக்கு ஆயுா்வேத மருந்துடன் மது கலந்து கொடுத்து இருவரும் தமிழில் 96  மலையாளத்தில் த்ரிஷியம் பட பாணியில் வித்யாவை கொலை செய்து, அவளுடைய செல்போனை திருவனந்தபுரம் மும்பை செல்லும் நேத்ராவதி ரயிலில் போட்டு விட்டனா். வித்யாவின் உடலை இருவரும் காரில் ஏற்றி நெல்லை மாவட்டம் ஏா்வடி மலைப்பகுதியில் கொண்டு போட்டனர் என்று காவல்துறையினர் கூறினர். இந்த சம்பவத்தால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 



 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.