Skip to main content

கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்... முதல்வர் அதிரடி!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

கேரள வருவாய் துறையின் ஆணையர் பொறுப்பிலிருந்தவர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ். திருமணமானவர் என்றாலும் சபலம் அவரை விட்டு வைக்கவில்லை. வாஃபா ஃபெரோஸ் என்பவரின் கணவர் வெளி நாட்டுப் பணியிலிருப்பதால், அவர் திவனந்தபுரத்தில் மாடலிங் தொழிலிருந்தவர். அவருடன் தொடர்புவைத்துக் கொண்ட ஸ்ரீராம் வெங்கட்ராமன் அவரைத் தன் காதலியாக வசப்படுத்தியிருக்கிறார்.


கடந்த 02.08.2019 அன்று திருவனந்தபுரம் ஐ.ஏ.எஸ். கிளப்பில் சக அதிகார ஐ.ஏ.எஸ்.களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டவர் அளவுக்கதிமான போதையிலிருந்திருக்கிறார். நடு இரவு 12.45 மணியளவில் தன் காதலி வாஃபா ஃபெரோஸை வரச் சொல்லி காரில் தன்னை வீட்டுக்குக் கொண்டு செல்லும்படி தெரிவிக்க, வந்த காதலியையும் பார்ட்டியில் ஐக்கியமாக வைத்தவர் பின் அவளுடன் காரில் கிளம்பியிருக்கிறார். அவரின் செம போதை நிலையக் கண்ட காதலி, தானே காரை ஒட்டுவதாகச் சொல்லியும் கேட்காத ஸ்ரீராம் வெங்கட்ராமன் போதையில் கண் மண் தெரியாமல் வேகக் கட்டுப்பாடு செய்யப்பட்ட மியூசியம் சாலையில் புயலாகக் காரைக் கிளப்பியிருக்கிறார். அது சமயம் மலையாள சிராஜ் பத்திரிகையின் முதன்மை நிருபரான முகம்மது பஷீர் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவரது பைக்கில் ஐ.ஏ.எஸ்.சின் கார் மோதியது. பைக்குடன் தூக்கி வீசப்பட்டதில் எதிரேயுள்ள பெரும் சுவரில் மோதியடிக்கப்பட்ட பஷீரின் ஆவி அந்த நொடியிலயே அடங்கியிருக்கிறது.

kerala ias officer wrong movement cm suspension order

விபத்தால் வெலவெலத்துப் போன ஸ்ரீராம் வெங்கட் ராமன், தன்னுடைய போதை பற்றியும், விபத்தையும், தெரிவித்தவர் தன்னுடைய முழு லைப்பும் க்ளோஸாகி விடும். காப்பாற்றச் சொல்லி ஐ.ஏ.எஸ் கிளப்பில் மன்றாட, மறுகணம் கேரள  ஐ.ஏ.எஸ்.களும், ஐ.பி.எஸ்.களும் கூட்டணி போட்டன. நிலைமைகள் தடம் புரள வைக்கப்பட்டன. மேலிடத்து உத்தரவுப்படி ஸ்பாட்டுக்கு வந்த மியூசியம் சாலை எஸ்.ஐ. அப்பாவி போல, வெங்கட்ராமனையும் அவர் காதலியையும், பக்கத்திலிருக்கும் ஹோட்டலுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தவர், ஓவர் நைட்டில் விபத்துக் பதிவு கடமையை முடித்தார்.


அடுத்த பக்கம் ஹோட்டலுக்குப் போன ஐ.ஏ.எஸ்., அங்கிருந்து அருகிலுள்ள ஸ்டார் அந்தஸ்தைக் கொண்ட (கிம்ஸ்) அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகி, தன் உடலின் ரத்தத்தில் கலந்திருந்த ஆல்கஹால் முழுவதையும் அந்த ஸிம்டம் இல்லாத அளவுக்குக் காலிசெய்தவர், பின்பு தன் உடல் நிலை சரியில்லை என்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

kerala ias officer wrong movement cm suspension order

விபத்து ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களில், குற்றவாளியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டிய காவல்துறை, விதியை வீசி விட்டு, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். கூட்டணி திட்டப்படி செயல்பட்டு 34 மணி நேரம் கழித்து வெங்கட்ராமன் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட் முன் நிறுத்தியது. அதே சமயம் போதை ஐ.ஏ.எஸ் தரப்பும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடியது. குடித்து விட்டு வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்தினார் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ். என அவர் காதலி வாஃபா. பெரோஸிடம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வாக்கு மூலத்தை வைத்து, ஜாமீன் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தது போலீஸ் தரப்பு. அப்படி என்றால் ஆதாரமாக எங்கே மருத்துவச் சான்றிதழ் என்று கேட்ட நீதிபதியிடம், உதட்டைப் பிதுக்கியது போலீஸ். குடித்தவரை, மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அரிச்சுவடி கூடத்தெரியாதா என்று நீதி மன்றம் போலீசைப் பின்னியெடுத்தது. ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. காலரைத் தூக்கி விட்டபடி கெத்தாக ஜாமீனில் வெளியே வந்தார் ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்.

kerala ias officer wrong movement cm suspension order

இந்த டிராமாக்களையும் விபத்தையும் கண்டு கொதித்துப் போன திருவனந்தபுரம் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நடந்த இந்த சம்பவத்தில் ஐ.ஏ.எஸ்.களின் திருகு வேலைகள் பற்றி ஏ.டூ.இஸட் முதல்வர் பினராய் விஜயனிடம் தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சரான சைலஜா. ஐ.ஏ.எஸ். அமைப்பின் முணு முணுப்பையும் லட்சியப்படுத்தாமல் அரசு தண்டனையாக, போதை அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமனை சஸ்பெண்ட் செய்தார் முதல்வர் பினராய்.


முதல்வரின் பணியிடை நீக்க உத்தரவு கடந்த 6 மாதமாக நீடித்த வேளையில், போதை ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் காப்பாற்ற மீண்டும் ஐ.ஏ.எஸ் கூட்டணி பின் புற வேலைகளைக் கச்சிதமாகவே செய்தது.

kerala ias officer wrong movement cm suspension order

மத்திய அரசின் ஐ.ஏ.எஸ். பணியாளர்களுக்கான விதிமுறைகளின் படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கோப்புகளை கூட்டணிகள் கேரள தலைமைச் செயலாளர் தோம் ஜோஸின் உதவியோடு தயார் செய்தனர். அத்துடன் ஸ்ரீராம் வெங்கட்ராமன் மீது போலீஸ் சைடில் சார்ஜ் ஜீட் ஃபைல் செய்யப்படாதவாறும் பார்த்துக் கொண்டார்கள்.


ஸ்ரீராம் வெங்கட்ராமனின் ஆறு மாதகால சஸ்பென்ஷனைச் சுட்டிக் காட்டிய தலைமைச் செயலாளர் தோம் ஜோஸ், விதிகளின்படி அவரை மீண்டும் பணியிலமர்த்திக் கொள்ளலாம் என்று கோப்பில் விரிவுரை எழுதி. ஃபைலை முதலமைச்சரின் ஒப்பதலுக்காக அவரது அலுவலகத்திற்கு அனுப்பி  வைத்தார். இவைகள் வெளியே தெரிந்தால் விஷயம் புயலைக் கிளப்பிவிடலாம் என்ற அச்சத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாகவே வைத்துக் கொண்டனர்.


கோப்புக்களை ஆராய்ந்த முதல்வரின் அலுவலகம், சம்பவம் நடந்து ஆறுமாதம் கடந்தும் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதை முதல்வர் பினராய் விஜயனிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரம் இந்த நடவடிக்கைகள் கேரள பத்திரிகையாளர்களைக் கொதிக்க வைத்து விட்டது. அது விஷயத்தில் கடுமையான ஆட்சேபணையையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறது. கேரள பிரஸ் கிளப்.

kerala ias officer wrong movement cm suspension order


அனைத்தையும் அலசிப்பார்த்த முதல்வர் பினராய் விஜயன் தவறுக்குத் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும், மத்திய அரசுப் பணியாளர் என்றாலும் சட்டம் ஒன்று தான். தப்பு தப்புத்தான் என்று ஐ.ஏ.எஸ். அமைப்பின் கடுப்பையும் லட்சியப்படுத்தாமல் ஸ்ரீராம் வெங்கட்ராமனின் சஸ்பென்ஷனை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறார்.


அத்துடன் நின்று விடாமல் டி.ஜி.பி. பெஹ்ராவை அழைத்த பினராய் விஜயன், தாமதம் செய்யாமல் போதை அதிகாரி கேஸில் சார்ஜ் ஜீட் தாக்கல் செய்யவும் உத்தரவிட, போலீஸ் குற்றப் பத்திரிகையைத் தற்போது தாக்கல் செய்துள்ளது.


ஏ1. ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ். ஏ2. அவரின் காதலி வா.பா பெரோஸ் இருவருமே குற்றவாளிகள். இரண்டு பேரும் போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக 20 ஆதாரங்களைக் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறது தொடர்புடைய காவல் சரகம். சர்வ வல்லமை கொண்டவர்களே என்றாலும் குற்றம், குற்றமே என நடவடிக்கை எடுத்திருக்கிறார் சாமான்யரான முதல்வர் பினராய் விஜயன்.


முதல்வர் பினராய் விஜயன் சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். என்கிறார்கள் கேரள பத்திரிகையாளர்கள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.