Skip to main content

22 வருட கனவு... கல்லூரி தோழிகளாக மாறிய தாயும் மகளும்! 

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Kerala alupuzha woman and her daughter got LLB Degree at same time

 

கல்விக்கும் பட்டம் பெறுவதற்கும் வயது என்பது ஒரு தடையில்லை என்பார்கள். அந்த வகையில்தான் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தாயும் மகளும் சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்து தற்போது ஒன்றாக வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளனர். 

 

கேரள மாநிலம், ஆலப்புழ காயங்குளத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மாத்யூ தோமஸ். இவருடைய மனைவி பத்தனம்திட்டாவைச் சோ்ந்த மரியம் மாத்யூ. இவர், மாவேலிக்கர பிஷப் மூர் கல்லூரியில் படித்த பட்டதாரி ஆவார். இவர்களுடைய மகள் சாரா எலிசபெத்தின் படிப்புக்காக திருவனந்தபுரம் மண்ணந்தலயில் வசித்துவருகின்றனர்.

 

இந்நிலையில், திருமணம் முடிந்த நாளிலிருந்தே கணவரைப் போன்று வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை மரியம் மாத்யூவுக்கு இருந்தது. அதற்காக அவர் 22 வருடங்களாகக் காத்திருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த மகள் சாரா எலிசபெத் 2016இல் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் 5 வருட படிப்பான எல்.எல்.பி.யில் சோ்ந்தார். அப்போது தாய்க்கு இன்னும் ஆசை கூடியது. இதையடுத்து மகளுக்கு இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு படிப்பு தொடங்கியதும் மரியம் மாத்யூ ஏற்கனவே டிகிரி முடித்திருந்ததால் அவருக்கு எல்.எல்.பி படிக்க மூன்று ஆண்டுகளே போதும். இதனால் 2018இல் மகளுடன் அதே கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார் மரியம் மாத்யூ. 

 

கல்லூரியில் அந்த மூன்று ஆண்டுகளும் தாயும் மகளும் தோழியாகவேதான் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் 2021 நவம்பரில் படிப்பு முடிந்து தேர்வில் கல்லூரி அளவில் இருவரும் முதல் மதிப்பெண் எடுத்து வெற்றிபெற்று அசத்தியுள்ளனர். இதையடுத்து, இருவரும் கடந்த 3ஆம் தேதி திருவனந்தபுரம் வஞ்சியூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தங்களைப் பதிவு செய்தனர். அப்போது அனைத்து வழக்கறிஞர்களும் தாய்க்கும் மகளுக்கும் வாழ்த்துகளைக் கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.