Skip to main content

ஒன்றாக புதைக்கப்பட்ட சிறுமிகள்! உருக்கமான பின்னணி!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

 

சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கேரளாவை புரட்டிப் போட்டிருக்கிறது பெருமழை. நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களில் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் இறுதிநிகழ்வு நெஞ்சை உலுக்கும் சம்பவமாக மாறியிருக்கிறது.

 

k

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது நிலம்பூர். இங்குள்ள கவலப்பாறா எனும் மலைக்கிராமத்தில் முத்தப்பன்குன்னு என்ற மலைச்சரிவுகளில் ஏராளமானோர் குடியிருந்து வந்தனர். அந்தக் குடியிருப்புகளிலேயே உச்சியில் விக்டர் மற்றும் தாமஸ் ஆகிய சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் சிறிய வீட்டில் வசித்து வந்தனர். இந்த ஐந்து குழந்தைகளுமே ஒரே படுக்கையில், ஒன்றாக கட்டிக்கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

 

கடந்த வியாழக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக, கடுமையான நிலச்சரிவால் அந்தப்பகுதி பாதிப்புக்குள்ளானது. இதில் விக்டர் – தாமஸின் வீடு மோசமாக தாக்கப்பட்டது. நிலைமையின் தீவிரமுணர்ந்து குழந்தைகளை மீட்கச் சென்றபோது, 2 மாத கைக்குழந்தை உட்பட மூவர் மீட்கப்பட்டனர். சிறுமிகளான அலீனா மற்றும் அனகா ஆகியோர் துரதிர்ஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

 

a

 

அலீனாவின் அழுகுரல் மட்டுமே கேட்டுக்கொண்டே இருந்தது இரவு முழுவதும். மிகவும் ஆபத்தான சூழலில் மணிக்கணக்காக தோண்டித் தேடியும், குழந்தைகள் மீட்கப்படவில்லை. மறுநாள் வெள்ளிக்கிழமை காலை அனகாவை மீட்டபோது, அவளுக்கு உயிரிருப்பதாகவே எண்ணினார்கள். ஆனால், மேற்கொண்டு அவளைக் காப்பாற்றுவதற்கான எந்த வழியும் அங்கே அமையவில்லை. தொலைத்தொடர்பு, சாலை இணைப்புகள் என அனைத்துமே துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் மருத்துவமனை கொண்டுசென்றபோது அனகா உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார்கள் மருத்துவர்கள்.

 

அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை, அலீனாவின் அழுகுரல் கேட்ட பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய தீவிர தேடுதல் பணியில், அலீனா சடலமாக மீட்கப்பட்டாள். இந்த நிலச்சரிவில் இருந்து மட்டும் தற்போதுவரை இந்த சிறுமிகள் உட்பட 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 55 பேரின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 

எவ்வளவோ போராடியும் சிறுமிகளை காக்க முடியவில்லையே என்று அவர்களின் குடும்பத்தினர் கதறியழுதனர். இதையடுத்து, திங்கள்கிழமை காலை அலீனா மற்றும் அனகாவின் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வு பூதானம் பகுதியிலுள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இருவரும் எப்போதுமே கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்குபவர்கள் என்பதால், தனித்தனி சவப்பெட்டிகளில் வைத்து, அவற்றை ஒரே குழியில் புதைத்தனர். இதை பார்த்து பலரும் கதறியழுத சம்பவம் நெஞ்சை உறையச் செய்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI

 

தென் மாநிலங்களிலும் விட்டு வைக்காத கனமழையால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். மேலும் பல பேர் காணவில்லை.  

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI


இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.  பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும். கேரள மாநிலத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி மழையால் அதிக பாதிப்பை சந்தித்த வயநாடு பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட கூடிய இடங்களை அரசு முன் கூட்டியே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்ட கால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். 

 

 

 

 

 

Next Story

கனமழை காரணமாக கொச்சின் விமான நிலையம் நள்ளிரவு 12.00 மணி வரை மூடல்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் 1 கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அதே போல் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 150- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 

KERALA HEAVY RAIN FLOOD COCHIN AIRPORT CLOSE AT TODAY MIGHT NIGHT 12.00 VERY CRITICAL


இந்நிலையில் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

 

KERALA HEAVY RAIN FLOOD COCHIN AIRPORT CLOSE AT TODAY MIGHT NIGHT 12.00 VERY CRITICAL

 

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கொச்சின் விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்தை நள்ளிரவு 12.00 மணி வரை மூடப்படும் என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் விமான சேவை முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறிப்பாக  மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் மிக அதிகன மழைக்கும், வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதல்வர் உத்தரவிட்டார்.   இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது.