Published on 07/03/2019 | Edited on 07/03/2019
![kashmiri](http://image.nakkheeran.in/cdn/farfuture/ulGpH2dum792r42vXxT4sAgDTEYscM5qBb77t2yrm0Q/1551965806/sites/default/files/inline-images/kashmiri-std.jpg)
உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ பகுதியில் காஷ்மீரை சேர்ந்த உலர் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் பழ விற்பனை செய்து வந்த 2 காஷ்மீரிகளை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வலதுசாரி அமைப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அவர்களே வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் லக்னோவில் நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோவில் இவர்கள் காஷ்மீரிகள் என்பதால் தான் தாக்குகிறோம் என கூறியபடியே அந்த வியாபாரிகளை தாக்குகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.