Skip to main content

காஷ்மீர் விவகாரம்: ராஜினாமா செய்த கேரளா ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்திய உள்துறை நோட்டீஸ்

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கி ஆகஸ்ட் 6-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முமுவதும் எதிர்கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்தநிலையில் காஷ்மிரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அடக்கு முறையும் அமல்படுத்தப்பட்டதால் இது ஜனநாயகத்துக்கு எதிரானது காஷ்மீரில் வாழும் மக்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்லி கேரளா கோட்டயத்தை சேர்ந்த 34 வயதான ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்து ஐஏஎஸ் வட்டாரம் மட்டுமல்லாமல் நாடு முமுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
 

kashmir issue


2012- ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சியில் இந்தியா அளவில் 59 ஆவது இடம் பிடித்த கண்ணன் கோபிநாத் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி துறை செயலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் ஆகஸ்ட் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

மேலும் அவர் "என் கருத்துரிமையை மீண்டும் நான் பெற விரும்புகிறேன். ஒரு நாளாவது நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டியிருக்கின்றன. அந்த மக்கள் தங்கள் உரிமையை இழந்து நிற்கிறார்கள்.

நான் நிறைய நம்பிக்கையோடு இந்திய ஆட்சி பணிக்கு வந்தேன். குரலற்றவர்களின் குரலாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் வந்தேன். ஆனால் இங்கே என் குரலை நான் இழந்து விட்டேன்" என்றார் கண்ணன் கோபிநாத். இந்தநிலையில் அவரின் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்கும் வரை அவர் அந்த பணியில் இருந்து அரசு கொடுத்த பணிகளை செய்து முடிக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டியிருந்தது. ஆனால் கண்ணன் கோபிநாத் அதற்குள் வெளியேறி விட்டார்.


இந்தநிலையில் அகில இந்திய சிவில் சர்வீஸ் சட்டம் 1968 விதி 8ன் படி அரசின் கொள்கைக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாத் கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் ழூலம் கண்ணன் கோபிநாத் மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாயும் என்று கூறப்படுகிறது.
                                                         
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.