Skip to main content

ரயிலை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை -ஆத்திரத்தில் பிறமாநிலத் தொழிலாளர்கள்!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

kkkk


மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பையொட்டி, பல்வேறு மாநிலங்களில் சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் ஊர்திரும்ப அனுமதி வழங்கியது. இதையொட்டி ஒவ்வொரு மாநிலமும் இந்தத் தொழிலாளர்களை பஸ் மற்றும் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவருகிறது.
 

அதேபோல பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்திலும் லட்சக்கணக்கான பிற மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்துப் பதிவு செய்திருந்தனர். கர்நாடகாவிலிருந்து பீகார் திரும்ப மட்டும் 53,000 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையொட்டி இந்த மாநிலங்களுக்குத் தொழிலாளர்கள் செல்ல ரயில்வேயில் புகைவண்டி அனுப்பக் கோரி கர்நாடக மாநிலம் முன்பதிவு செய்திருந்தது.
 

இதற்கிடையில் இத்தனை லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினால் கர்நாடகாவில் நடைபெறும் பல்வேறு கட்டட வேலைகள் இடையிலேயே நின்றுவிடும். இதனால் தனியார் கட்டடத் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும், அரசுக்குமே இடையூறு வருமென கர்நாடக ரியல் எஸ்டேட் அமைப்பு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்து முறையிட்டது.
 

இதையடுத்து தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தி இங்கேயே தங்கவைக்கவும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முதல்வர் உத்தரவிட்டார். தொழிலாளர்கள் ஊர்திரும்ப பதிவுசெய்த ரயில்களையும் ரத்துசெய்யும்படி ரயில்வேக்கு கர்நாடக அரசு மனு செய்தது.
 

இது வெளிமாநிலத் தொழிலாளர்களிடையேயும், தொழிலாளர்களுக்காகப் போராடும் சமூக அக்கறையுள்ள நபர்களிடமும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. “இது ஜனநாயகப்பூர்வமற்ற செயல். அரசே தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதற்கு ஒப்பாகும். கூடுதல் ஊதியம், வசதி செய்துதந்து விருப்பமுள்ளவர்களை வேலைசெய்யச் சொல்லவேண்டும். ஊர்திரும்ப விரும்புபவர்களுக்கான ரயிலை ரத்துசெய்வது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்” எனக் கர்நாடக வழக்கறிஞரான சஞ்சய் ஹெக்டே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.