Skip to main content

கவிழ்ந்தது கர்நாடக அரசு! பதவி விலகுகிறார் குமாரசாமி!! 

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் பேசி வரும் முதல்வர் குமாரசாமி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். பதவி விலக தயார் என முதல்வர் குமாரசாமி அறிவித்த நிலையில், கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

 

KARNATAKA GOVERNMENT DISQUALIFIED FLOOR TEST RESULT

 

இதனையடுத்து எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் எழுந்து நிற்கும் அடிப்படையில், ஆளும் கட்சிக்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவு என்பதை சட்டப்பேரவை செயலர் கணக்கிடும் பணியை மேற்கொண்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் மும்பையில் தங்கியுள்ள நிலையில், வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் குரல் வாக்கெடுப்பு, பகுதி வாக்கெடுப்பு என இரண்டு முறையில் நடைபெற்றது. கர்நாடக அரசு கவிழ்ந்தது என சபாநாயகர் அறிவிப்பு. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள், அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவாகியுள்ளது 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் ராஜினாமா; இ.பி.எஸ். மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Karnataka State ADMK Sec Resigns EPS Allegation of sensationalism 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மிகவும் நொந்து போய் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் படத்தை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தை ஸ்டாம்ப் ஸைசில் வைத்துக் கொண்டிருக்கிறார். இது போன்று வேறு யாராவது வைத்திருந்தால் கூட பரவாயில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தியும், அதிமுக கொடியை பிடித்துக் கொண்டு எம்.ஜி. ஆரை சிறுமைப்படுத்துவது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஆகும். ஒவ்வொரு எம்.ஜி.ஆர் ரசிகரும் வேதனையோடும், கொதிப்போடும் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் விருப்பமனு கொடுக்கப்பட்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.  கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட அனுமதிக்கவில்லை. இவ்வாறு கட்சி தலைமையே கட்சியை அழிக்கும் வேதனைக்குரிய செய்தியை அறிந்த பின்னரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பதவியில் இருந்து என்ன பயன்” எனத் தெரிவித்தார். 

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த கவுரவ் வல்லப்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Gaurav Vallabh joined BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் அக்கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து கவுரவ் வல்லப் கூறுகையில், “மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விரிவான கடிதம் எழுதி, எனது உணர்வுகள் அனைத்தையும் வெளிப்படுத்தினேன். கூட்டணியின் சில பெரிய தலைவர்கள் சனாதனம் மற்றும் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்தபோது காங்கிரஸ் கட்சியின் மௌனம் என்னை காயப்படுத்தியது. ராமர் கோவில் மீதும், நம் நாட்டில் காங்கிரஸ் கட்சி நாட்டின் வளத்தை உருவாக்குபவர்களை இரவு பகலாக துஷ்பிரயோகம் செய்கிறது. இந்த விஷயங்களை நான் தெளிவாக உணர்ந்து, கட்சி மேடையிலும் பல இடங்களில் இந்த விஷயத்தை எழுப்பினேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கவுரவ் வல்லப் இன்று (04.04.2024) தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். முன்னதாக பிரபல குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜேந்தர் சிங் நேற்று (03.04.2024) பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.