Published on 30/06/2018 | Edited on 30/06/2018
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் அறிவித்ததை போன்றே அனைத்து கட்சி கூட்டம் இன்று விதான் சௌவ்தாவில் தொடங்கப்பட்டுள்ளது.
![karnataka](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zhjahs7WQRZxvvL4_K-JvM3vrZqcu9iVrA-RO5rscAY/1533347620/sites/default/files/inline-images/5_10.jpg)
+
கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் எடியூரப்பாவும் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் காவேரி மேலாண்மை ஆணையம் பற்றியும், காவிரி ஒழுங்காற்றுக்குழு பற்றியும் பேச இருப்பதாக முன்பே தெரிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.
![ediyurappa](http://image.nakkheeran.in/cdn/farfuture/fsxg-28NqXKR_wRWrLzCA1qKQ6fMAcv12PtSfjcIhJ0/1533347620/sites/default/files/inline-images/6_5.jpg)
மத்திய அரசாங்கம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு விஷயத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை காதுகொடுத்து கேட்காமல், அவர்களே ஒரு முடிவு எடுத்து கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்ததாக குமாரசாமி இதற்கு முன்பே தெரிவித்திருந்தார்.