Skip to main content

'ஐ.ஆர்.சி.டி.சி.' மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

IRCTC Launches Online Bus Booking Services


இந்திய ரயில்வேக்குச் சொந்தமான 'ஐ.ஆர்.சி.டி.சி.' செயலி ('Indian Railway Catering and Tourism Corporation Limited'- IRCTC APP) மூலம் இனி நாடு முழுவதும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் பேருந்து முன்பதிவு செய்யும் வகையில், செயலி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. ஒப்பந்தம் செய்துள்ளது. 

 

ஐ.ஆர்.சி.டி.சி. செயலி மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்வது?

 

ஆண்ட்ராய்டு செல்ஃபோனில் கூகுள் பிளே (Google Playstore) அல்லது ஆப்பிள் செல்போனில் ஐஓஎஸ் (iOS)- செயலிக்குச் சென்று ஐ.ஆர்.சி.டி.சி. செயலி (IRCTC APP)- என்று டைப் செய்து செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு, ஒருமுறை நிரந்தரப் பதிவை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு, எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, பேருந்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு, டிக்கெட்டைப் பதிவு செய்துகொள்ளலாம். 

 

அதேபோல், https://www.bus.irctc.co.in/home என்ற இணையதளத்திற்குச் சென்றும் பேருந்து டிக்கெட்டுகளை பொதுமக்கள் எளிதாகப் பதிவு செய்துகொள்ளலாம். 

 

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஏற்கனவே விமான டிக்கெட், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் நூதன முறையில் மோசடி!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
issue for through the IRCTC website

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 51) என்பவர் ரயில் மூலம் நாகர்கோயில் செல்லவிருந்த தனது ரயில் பயணத்தை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரத்து செய்துள்ளார். அப்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் உதவிக்கு (FOR HELP) என்று இருந்த 9832603458 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது ரயில் பயண கட்ட பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர் முனையில் பேசியவர் ஸ்ரீதரனின் ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். அதனை நம்பி ஸ்ரீதரனும் தனது ஏடிஎம் கார்டு விவரங்களை கூறி உள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்த எண்ணை ரயில்வே நிர்வாகம் பதிவிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. எனவே ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என வடபழனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது; ரயில் பயணிகள் அவதி

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

IRCTC website down; Train passengers suffer

 

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ரயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ள இணையதளத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் எனவும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் குறித்து ஏதேனும் விளக்கம் தேவைப்படின் ரயில்வே உதவி மையத்தைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் 14646,0755 - 6610661 & 0755-4090600 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது etickets@irctc.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மதியம் 12 மணியளவில் இருந்து சுமார் அரை மணி நேரமாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.