ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ப.சிதம்பரம் தரப்பு சிபிஐ காவலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில், ப.சிதம்பரத்தை மேலும் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க விருப்பமில்லை என தெரிவித்தது. மேலும் ப.சிதம்பரத்தை உடனடியாக நீதிமன்ற காவலில் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5- ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டனர். இதனால் ப.சிதம்பரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை விசாரித்து வரும் டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனுவை இன்று பிற்பகல் 03.30 மணிக்கு விசாரிக்க உள்ளது. இந்த நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி செப்டம்பர் 5- ஆம் தேதி வரை சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.