Skip to main content

சாக்கடையில் விழுந்த கஞ்சா போதை இளைஞர்; நீதிபதி வீட்டில் தஞ்சம்; துரத்திப் பிடித்த போலீசார்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Intoxicated youth who fell into the gutter; sheltered at the judge's house; Chased by the police

 

கஞ்சா போதையில் இருந்த இளைஞரைப் போலீசார் துரத்திச் சென்றபோது போதை இளைஞர் சாக்கடையில் விழுந்ததோடு நீதிபதியின் வீட்டில் உள்ளே ஒளிந்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

புதுச்சேரி மாநிலம் ஜீவா நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கீழ்ப் பகுதியில் சுமார் ஐந்து இளைஞர்கள் கஞ்சா புகைப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்ற பொழுது, இளைஞர்கள் தலை தெறிக்க அங்கிருந்து ஓடினர். அதில் ஒரு இளைஞரைப் போலீசார் துரத்திக் கொண்டு ஓடிய பொழுது சாக்கடையில் தவறி விழுந்தார். பின்னர் சாக்கடையிலிருந்து எழுந்த இளைஞர் அருகிலிருந்த நீதிபதி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார். பின் தொடர்ந்து சென்ற போலீசார் அந்த இளைஞரைப் பிடித்தனர். விசாரணையில் அந்த இளைஞர் பெரியார் நகரைச் சேர்ந்த அரவிந்த் என்பது தெரியவந்தது. அந்த இளைஞரை அருகிலிருந்த பக்கெட் தண்ணீரில் குளிப்பாட்டி ஆட்டோவில் ஏற்றி விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டு வேலைக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Youth misbehave with a 13-year-old girl while doing domestic work

அரியானா குர்காவன் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காக 13 வயது சிறுமியை மாதம் 9 ஆயிரம் சம்பளத்திற்கு கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்த்துள்ளனர். முதல் இரண்டு மாதத்திற்கு மட்டும் அந்த பெண்ணின் தாயாருக்கு சம்பளப் பணத்தை வீட்டின் உரிமையாளர் சசி என்ற பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் சம்பளப்பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். அத்தோடு, சிறுமியை பார்க்க கூட அவரின் தாய்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், சிறுமியை வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்ததுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் சசி சிறுமியை தாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்தோடு, அவரது இரு மகன்களும் சிறுமியின் ஆடைகளை களைத்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியை கட்டி வைத்து, கைகளில் ஆசிட்டை ஊற்றி நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் சிறுமியின் தாய், தனது உறவினருடன் நேராக அந்த வீட்டிற்கு வந்துபார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சசி மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

கடலூரில் 7 மையங்களில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Constable Second Level Written Exam in 7 centres in Cuddalore

இரண்டாம் நிலை காவலர் நேரடி தேர்வு 2023, (இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு துறை காவலர்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 3359 பணியிடங்களை நிரப்பிட எழுத்து தேர்வு கடலூர் மாவட்டத்தில் 1.செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குப்பம் 2.செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மஞ்சகுப்பம், 3. கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி வில்வநகர், 4. பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவனாம்பட்டினம், 5. அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர், 6. சி.கே மேல்நிலைப்பள்ளி ஜட்ஜ் பங்களா ரோடு, 7. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி கம்பியம்பேட்டை ஆகிய 7 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 

செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் ஜியாவுல் ஹக் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.