Skip to main content

வஞ்சத்துடன் கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதிலடிகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் இராணுவத்தின் பதுங்கு குழிகளை தாக்கி அழித்தது. அதுமட்டுமின்றி அழித்ததற்கான வீடியோ பதிவையும் இந்திய இராணுவம் அண்மையில் வெளியிட்டது. இந்த பதிலடியால் திணறிய பாகிஸ்தான் இராணுவம் ஜம்முவில் உள்ள எல்லை பாதுகாப்புப்படை முகாமை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

india

 

 

 

 

india

 

இதனால் இந்திய இராணுவம் தாக்குதலை கைவிட்டது. ஆனால் தாக்குதல் கைவிடப்பட்ட அடுத்த சிலமணி நேரத்திலேயே கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளை நோக்கி அத்துமீறிய தாக்குதலை மீண்டும்  நடத்தியது.


 

india

 

அந்த தாக்குதலில் சிறிய மோட்டர் ரக குண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இந்திய இராணுவ எல்லை பாதுக்காப்புபடையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் எல்லைமீறி தாக்குதல் நடத்தப்பட்டால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் எனவும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய எல்லை பாதுக்காப்புப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.